Connect with us

General Health & Wellness

General Health & Wellness

ஆசனவாயில் சீழ்..ரத்தம்…வடிந்து மூல பவுத்திரம் படுத்துகிறதா?

ஆசனவாயில் சீழ்..ரத்தம்…வடிந்து மூல பவுத்திரம் படுத்துகிறதா? இதோ தீர்வு தரும் மூல பவுத்திர கஷாயம்!

ஆசனவாயில் சீழ்..ரத்தம்…வடிந்து மூல பவுத்திரம் படுத்துகிறதா? இதோ தீர்வு தரும் மூல பவுத்திர கஷாயம்!
மூல நோய், பவுத்திர நோய், தோல் நோய்கள் ஆசனவாயில் அரிப்பு, சீழ் வடிவது, தண்ணீர் வடிவது, ரத்தம் கலந்த சீழ் வடிவதுஎன்று பெரும் பிரச்சனையாக இருக்கும். இதற்குத் தீர்வு தரும் மூலம் பவுத்திர கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.
மூல பவுத்திர கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:
சுத்தி செய்த குக்கிலு சூரணம் 2 கிராம், திப்பிலி சூரணம் 2 கிராம், திரிபலா சூரணம் 2 கிராம், பட்டை சூரணம் 2 கிராம், ஏலக்காய் சூரணம் 2 கிராம்.
செய்முறை:
மேற்கண்டவைகளை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து 100 மிலியாக வற்றியவுடன் இறக்கவும். பின்னர் வடிக்கட்டி, காலை ஒருவேளை உணவுக்கு முன்பு, இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.
நிஜமாவா? அறுவை சிகிச்சை தேவையில்லையா?
அறுவை சிகிச்சை இல்லாமல் மூலம் பவுத்திரத்தை குணப்படுத்த முடியுமா? இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று மனச்சலவை செய்யப்பட்டு இருக்கிறோம். அது மட்டும் அல்ல, காதுகள் ஒட்டி, உள்நாக்கு அழற்சி மூலம், பவுத்திரம் நோய் என்றால் அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அப்படி அல்ல, மூலம், பவுத்திரம் ஆகிய இரண்டுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்த முடியும். அதற்குத் தீர்வுதான் இந்த மூல பவுத்திர கஷாயம்.
கார சூத்திரம்…கார நூல் சிகிச்சை…
மூல நோய்க்கு கார சூத்திரம் சிகிச்சையும், பவுத்திர நோய்க்கு கார நூல் சிகிச்சையும் ஆயுர்வேதத்தில் செய்யப்படுகிறது. குக்கிலு பிசினாக கிடைக்கும் ஒரு மூலிகை. இது ஒரு நல்ல ஆன்டிபயாடிக் என்று சொல்லலாம். திசுக்களின் உருவாக்கத்தை தூண்டி விடுவதில் குக்கிலு பெரும் இடத்தை வகிக்கிறது.
மூன்றுவகை மூலநோய்…
மூல நோய் மூன்று வகைகளில் இருக்கும். ஒன்று உள் மூலம் என்பார்கள். இது மலம் கழிக்கும்போது ஏதோ அடைப்பு ஏற்பட்டது போல இருக்கும். ஒரு முறை மலம் கழித்தால் முழுவதுமாக கழிக்க முடியாது. பிரச்சனை இருந்தாலும் அவ்வளவாக தெரியாது. இரண்டாவது மூலம் மலம் கழிக்கும்போது ஆசனவாயில் தசை தொங்குவது போல இருக்கும். மலம் கழித்து முடிந்தவுடன் ஒன்றும் இருக்காது உள்ளே போய்விடும். இது ஒருவகை மூலம். அடுத்த மூலம் எப்போதும் ஆசனவாயில் தசை தொங்கிக்கொண்டே இருக்கும். சில சமயம் அதில் இருந்து ரத்தம் வடியும். தண்ணீர் வடியும். இந்த மூன்று வகை மூலத்துக்குமே இந்த மூல பவுத்திர கஷாயம் சிறந்த மருந்து.
பவுத்திரம் என்பது…
பவுத்திரம் என்பது ஆசனவாய் சுற்றி கொப்புளங்கள் போல தோன்றி ஓட்டையாக மாறிவிடும். இதை அறுத்து எடுத்தாலும், மீண்டும் மீண்டும் கட்டி உருவாகி ஓட்டையாகும்.
கட்டிவந்து ஓட்டையாக மாறும்…
33 வயது பெண்மணி ஒருவர் மிகுந்த துயரத்தோடு வந்தார். அவருக்கு பவுத்திரம் இருந்தது. ஆசனவாய் பிட்டப்பகுதியில் கட்டிகள் தோன்றி ஓட்டையாக மாறிவிடும். இவருக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் மீண்டும் வந்து விடுகிறது என்கிறார். இதனாலேயே இவரது கணவர் இவரை விவாகரத்து செய்து விட்டதாகவும் கூறினார்கள் அவரது பெற்றோர். அவருக்கு இந்த மூல பவுத்திர கஷாயத்தைத்தான் பருகி வர சொல்லிக்கொடுத்தேன். முதல் மூன்று மாதங்களில் சில ஓட்டைகள் சரியாகி இருந்தது. அடுத்த மூன்று மாதங்களில் மீதம் இருந்த ஓட்டைகளும் சரியாகி இருந்தது. ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்கக் சொல்லியபோது, அவரது மருத்துவரே அவரை நம்பாமல் எப்படி ஒரு கஷாயத்தில் எல்லாம் சரியாகி இருக்கும் என்று ஸ்கேன் செய்து இருக்கிறார். ஆனால், இல்லை அவரும் மகிழ்ச்சியோட்டு என்னை பார்க்க வந்து இருந்தார். மூன்று நிலைகளில் இருக்கும். மூலம், பவுத்திரம், ஆசனவாய் வெடிப்பு, மூலத்தினால் உதிரப்போக்கு பவுத்திரம் என்று எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வாக இருக்கும் மூல பவுத்திர கஷாயம். தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடுதான் சாப்பிட வேண்டும்.காரணம் சுத்தி செய்த குக்கிலி வேண்டும் என்பதால்.

Newsletter Signup

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Health Remedy For Gout (Arthritis)

Joint & Spinal Pain

Change Your Lifestyle to Beat Diabetes

Diabetes

காலையில் எழுத உடனே தும்மல் வந்து கொண்டே இருக்கிறதா ? இதோ அதற்கு வீட்டிலிருந்தே தீர்வு

TAMIL

The Ayurvedic remedy for Gastric Problems

Gastric Problems

Newsletter Signup

Copyright © 2021

Connect
Newsletter Signup

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp