நமக்கு வரும் நோய்களில் சிலது தீரும், சிலது தீராது சிலது வாழ்நாள் முழுவதும் நம்மை கஷ்டப்படுத்திக்கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு நரம்பு மண்டலத்தில் உண்டாகும் நோய்களை சொல்லலாம். முதுகுத் தண்டு உடைந்து, செயல் இழந்து பக்கவாதம் வந்த பிறகு வாழ்வியல் முறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புமா என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கும். அதற்கு மிகச்சுலபமாக வழி வகை செய்யும் பக்கவாத கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.
பக்கவாத கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:
சித்தரத்தை சூரணம் 5 கிராம், குறுந்தொட்டி சூரணம் 5 கிராம், ஆமணக்கு பட்டை அல்லது வேர் சூரணம் 5 கிராம்.
செய்முறை:
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, காலை இரவு உணவுக்கு முன்பு பருகி வர பக்க வாதம் படிப்படியாக குணமாகும். பழைய வாழ்வியல் முறைக்கு மீண்டு வரலாம்.
எத்தனை வருடமாக பக்கவாதம்?
இரண்டு வருடம், மூன்று வருடம் என்று கூட பக்கவாதம் வந்து, கைகள், விரல்கள் நன்றாக வேலை செய்யவில்லை. வலிக்கிறது என்று பிரச்சனையில் சிக்கித் தவிப்பார்கள்.பக்கவாத நோயின் பக்க விளைவுகள் கால் பாதிப்பு, கைகளில் ஏற்படும் பாதிப்பு இவைகளோடு , உடலின் நரம்பு மண்டலத்தை சரி செய்யும் அருமையான மருந்து இந்த பக்கவாத கஷாயம்.
தசைநார்கள் பலம்…
தசை நார்களுக்கு பலம் அதிகரிக்கும்போதுதான் நரம்புகளின் பலமும் அதிகரிக்கும். இரண்டும் ஒரு சேர வேலை செய்யும்போதுதான் பக்கவாதம் சரியாகும். மூளை அளிக்கும் தகவல்கள் செயல்படும் உறுப்புக்களுக்கு முற்றிலும் செல்லாமல், கை கால் செயல் இழந்து போவதுதான் பக்கவாதம். சிலர் வைத்தியத்தால் ஒரு வாரத்தில் இம்ப்ரூவ் ஆகி விடுவார்கள். ஆனால், கைகளின் இயக்கம், கால்களின் இயக்கம் பழைய மாதிரி இல்லை என்று கவலை இருக்கும் அந்த மாதிரி வருத்தங்களை நீக்கும் அருமையான மருந்து இந்த பக்கவாத கஷாயம்.
வலிநிவாரண மாத்திரையை விட…
பக்கவாத பலவீனம் இரண்டாவது பிரச்சனை. மூட்டு வலி கை மூட்டு வலி, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி என்று வலி நிவாரண மாத்திரை போட்டாலும் தற்காலிக குணம்தான் கிடைக்கிறது. அதிலிருந்து வெளி வர முடியவில்லை என்கிற துயரமும், கை கால் இயங்குவதில் கோளாறுகள், குறைபாடுகள் சமாளிக்க முடியவில்லை என்றும் கவலை இருக்கும். இந்த பிரச்னையை குறைக்க குணப்படுத்த பக்கவாத கஷாயம் சிறந்த மருந்து. வெறும் பக்க வாதம் மட்டும் இல்லை விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு, வலி வேதனையை நீக்கும் அருமருந்து.