தோல் நோய்க்கு சிறந்த மூலிகை….
சிவப்பு அல்லது வெண்மை அல்லது மஞ்சள் நிறப்பூக்களை கொண்டு இருக்கும் கொடிவகைத் தாவரம் இது.மயில்மாணிக்கம் சாறு அல்லது விழுது உள்ளுகோ, வெளிப்புறமாகவோ பயன்படுத்தி வருகிறார்கள். வட இந்தியாவின் குஜராத்தில் உலகப்பிரசித்தி பெற்ற தோல் நோய் மருத்துவமனை. பயன்படுத்துவது இந்த மயில்மணிக்கம் மூலிகையைத்தான். மயில்மாணிக்கம் செடியின் சாறு . 30 மிலி அளவுக்கு, அல்லது அரைத்து எடுத்த விழுது ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து காலை, இரவு உணவுக்கு முன்பு சாப்பிடலாம். தோல் நோய்க்கு வெளிப்புற பூச்சுக்கும் பயன்படுத்தலாம்.
கரும்முட்டைப் பை நீர்க்கட்டிகள்…
பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை கருமுட்டைப்பை நீர்க்கட்டிகள். பூப்படைந்த பெண்களுக்கு மாதவிலக்கு சரியாக இருக்கும். பிறகு காலதாமதம் ஆகும். ஹார்மோன் ரிபிளேஸ்மென்ட் தெரபி கருத்தடை மாத்திரைகள் கொடுப்பார்கள். எல்லாருமே இதுதான் நல்ல சிகிச்சை என்று நினைக்கிறோம். கருமுட்டைப்பை நீர்கட்டிகள் முழுமையாக குணமாகாமல் இருக்கும் சூழல், பெண்களுக்கு உடல் மாற்றம் அதாவது,வயிறு பெரிதாகிவிடும். பிட்டப்பகுதி பெருத்து, முகத்தில் தேவை இல்லாத இடத்தில் முடிகள் இது போன்ற பிரச்சனைகளை குறைக்க இந்த சாறு மிகச்சிறந்த மருந்து. குறைந்தது 6 மாதம் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
தோல் வெடித்து அரிப்பு உண்டாகிறதா?
மாதவிலக்கு இயற்கையாக ஏற்படும். கருத்தடை மாத்திரை சாப்பிட்டு ஏற்படும் மாதவிலக்கு கருமுட்டை இல்லாத மாதவிலக்காக மாறிவிடுகிறது. இவர்களுக்கு இயற்கை முறையில் குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைந்து போகும். நீர்கட்டிகள் கரைந்து மாதவிலல்க்கு ஏற்பட மயில்மாணிக்கம் சாறு, அல்லது விழுது மிகப்பெரிய மருந்து.. கால்களில் சிறு சிறு வட்டமாக தோன்றும். வறண்டு அரிப்பு ஏற்படுத்தும். தோல்; வெடித்து போகும். இது உடல் முழுவதும் பரவும். நாவில் கூட இது போல வரும். இதற்கு லெஜண் பிளானஸ் என்று பெயர் கத்தியை கொண்டு சுரண்டுவோமே என்று கூட நினைக்கத் தோன்றும். தூக்கமாத்திரை போட்டு தூங்கி விடுவார்கள். மன அழுத்தம் இருக்கும் பெண்களுக்கு இது கட்டாயம் இருக்கும். சோரியாசிஸ் அறிகுறிகள் போல இருக்கும். லெஜன் பிளானசை குறைக்கும் மிகச்சிறந்த மருந்து இதுதான்..மயில் மாணிக்கம் விழுதில் பசு நெய் குழப்பி மெதுவாக காய்ச்சி உடலில் தடவி குளித்தால் இது ஆறிப்போகும்.