கீழாநெல்லி தாவரம் என்பது இலைகளுக்கு பின் புறம் காய்கள் போல விதைகள் வரிசையாக இருக்கும்.
மஞ்சள் காமாலை, பித்தப்பை கற்கள், ஈரல் பாதிப்புக்கள் போன்ற நிறைய பிரச்சனைகளைத் தீர்க்கும் அருமருந்து கீழாநெல்லி. நமது ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம் மட்டும் அல்லாமல் நவீன மருத்துவமும் கூட கீழாநெல்லி மருத்துவ குணம் வாய்ந்தது என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறது. உணவுக்குழல் பிரச்சனை, குழந்தையின்மை பிரச்சனை, மூச்சுக்குழல் ஒவ்வாமை, போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து கீழாநெல்லி. இதை அரைத்து எடுத்து விழுதாகவோ. அல்லது அரைத்து எடுத்த சாறு 30 மில்லி அளவோ மோருடன் கலக்கி சாப்பிட வேண்டும். கொட்டைப்பாக்கு அளவு விழுது எடுத்து சாப்பிட வேண்டும்.
கேட்டக்கொழுப்பு சேர்ந்தால் மட்டும்தான்…
இதை மோரில் மட்டும்தான் அருந்த வேம்டும். காரணம் கொழுப்புடன் சேர்ந்தால்தான் கீழாநெல்லி மருத்துவ குணம் அடையும்.. கீழாநெல்லி ஈரலில் தொற்று ,, ஈரல் பழுதடையும் நிலை இருந்தாலும் அதை பாதுகாக்கிறது என்பது மருத்துவ அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட ஆய்வறிக்கைகைகளில் கீழாநெல்லியின் மருத்துவ குணம் பற்றி சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆதரித்த தலைவலிக்கு….
அசாமில் இருக்கும் ஒரு பரம்பரை வைத்தியர் ஒற்றைத் தலைவலிக்கு கீழாநெல்லியை மருந்தாக கொடுத்து வருவதை ஒரு டாகுமெண்ட் சமர்ப்பிக்க செல்லும்போது கண்டறிந்தேன். கீழாநெல்லி விழுதை கொட்டைப்பாக்கு அளவு வெறும் வயிற்றில் சாப்பிடும்போது ஒற்றைத் தலைவலி உண்டாக்கும் பித்தத்தின் அளவு குறைந்து வாந்தி நின்று ஒற்றைத்தலைவலியும் சரியாகி விடுகிறது. சிறுநீரக கற்கள் பித்தப்பை கற்கள் என்று பிரச்சனை வரும்போது கீழாநெல்லி சாறு அல்லது அரைத்து எடுத்த விழுதை சாப்பிடும்போது கற்களின் அளவில் மற்றம் ஏற்பட்டு பிரச்சனையும் குறைந்து போவதை பார்க்க முடியும். தலைமுடி பிரச்சனை, சோரியாசிஸ் பிரச்சனைக்கும் கீழாநெல்லி ஒரு தீர்வாக இருக்கிறது. இதை மருந்தாகவோ, உணவாகவோ யார் வேண்டுமானாலும் சாப்பிட்டு வரலாம்.