மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, 100 மிலியாக வற்றியவுடன், இறக்கி வடிக்கட்டி காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.
சாப்பிட்டவுடனே வயிறு வலிக்குதே…
முதலுதவி மருந்தாக கூட இதை பயன்படுத்தலாம். வயிற்று பொருமலுக்கு மிகச்சிறந்த மருந்து இரிட்டபுள் பவல் சின்ரோம் அல்சரேட்டிவ் கொலாய்டிஸ், வயிறு வலித்து, வலித்து மலம் கழிவது. மூன்றுமே பாதிப்பு ஏற்படுத்தும். தண்ணீர் குடித்தாலும், தேநீர் பருகினாலும் மலம் கழிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படும். உணவு உண்ட உடனே வயிற்றில் அழுத்தம் ஏற்படும். பெருங்குடல் அழற்சி அல்சரேட்டிவ் கொலாய்டிஸ் என்று சொல்லுவோம். மலத்துடன் கலந்து ரத்தம் சீழ்,வெளியேறும். மூன்றாவது வயிற்றுப்போக்கு பிரச்சனை. குடிக்கிற தண்ணீர் கூட வெளியில் வந்துவிடும். இது இருந்தும் கவனிக்காமல் விட்டால், சீதபேதி வந்துவிடும். புகையிலை பழக்கம், மது பழக்கம், எண்ணெய் உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்… இவர்களுக்கு இந்த சீதபேதி இருக்கும். இதற்குத் தீர்வு தரும் இந்த கஷாயம். .
வயிற்றில் பூச்சிகள்….
வயிற்றில் பூச்சிகள் சில உணவின் மூலமாக வருவது, சிலது ஒட்டுண்ணிகளாக இருக்கும் சில பூச்சிகள் சில உணவு செரிமானத்துக்கு உதவும் பூச்சுக்கள். குழந்தைகள் சரியாக சாப்பிடலை பேதிக்கு கொடுத்தால் பூச்சிகள் வெளியில் போகும். எந்த வயதிலும் வயிற்றில் பூச்சிக்கள் உருவாகலாம்.எந்த நோய்க்கும் வயிற்றில் இருக்கும் பூச்சிக்களையும், கழிவுகளையும் முதலில் வெளியேற்றிவிட வேண்டும்.நவீன மருத்துவத்தில் இதற்கு மருந்து கொடுக்கும்போது 4 நாளுக்கு சாப்பிட முடியாது. ஆனால், இந்த கஷாயத்தை கொடுக்கும்போது உடலின் ஆரோக்கியம் மேம்படும் பசி எடுக்கும். முகத்தில் பொலிவு உண்டாகும். சிறுநீர் கழிக்கும்போது முக்கி போனாலும் போக மாட்டேங்குது என்கிற பிரச்சனை இருக்கும். பெண்கள் இருமும்போது, சிரிக்கும்போது கையை ஊன்றி எழுந்திருக்கும்போது சிறுநீர் கசிந்துவிடும். அவர்கள் இந்த சீதபேதி கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும். மாம்பருப்பு சிறுநீர்ப்பையை சுருங்கி விரியும் தன்மையை அதிகமாக்கும்.