Rheumatoid Arthritis மூட்டுவலி கஷாயம் சாப்பிடுங்க..வலி பறந்தோடும் பாருங்க! மூட்டுவலி கஷாயம் சாப்பிடுங்க..வலி பறந்தோடும் பாருங்க! ByDR Gowthaman on July 31, 2023 மூட்டுவலி கஷாயம் சாப்பிடுங்க..வலி பறந்தோடும் பாருங்க!மூட்டு வலி, கழுத்து வலி, முதுகுத் தண்டு வலி என்று அவதி இருக்கும். மூட்டு வலி சிகிச்சை என்று மருந்து,மாத்திரை எடுத்தும் குணமில்லை என்று வருத்தப்படுவார்கள். அந்த காலத்தில் இயற்கை முறையில் இப்படி எல்லாம் செய்து வலி இல்லாத சூழலில் இருந்திருப்பார்கள், தாத்தா பாட்டிகள். இப்போது இருக்கும் ஆண்கள், பெண்களை விட 100 மடங்கு அதிகமான வேலை இருந்தும், உணவே மருந்து எனும் இயற்கை முறை வாழ்வியலில்தான் அந்த காலத்தில் ஆரோக்கியமாக இருந்தார்கள். எனவே, இயற்கை முறையைக் தீர்வு தரூம் மூட்டு வலி கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.மூட்டுவலி கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:சித்தரத்தை சூரணம் 3 கிராம், சீந்தில் கொடிசூரணம் 3 கிராம், சுக்கு சூரணம் 3 கிராம்.செய்முறை:மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, 100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.முதலுதவி மருந்து போல வலி சட்டுன்னு குறையும்…!பொதுவாக மூட்டு வலி கஷாயம், எப்படி வலி மாத்திரை சாப்பிட்டால் வலி குறையுமோ அந்த அளவுக்கு வேகமாக வலி குறையும். மூட்டு வலியை குறைத்து உடலின் இயக்கத்தை சரி செய்யும் அருமருந்து இந்த கஷாயம்.பணம்கற்கண்டு அல்லது தேன் கலந்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் பால் கலந்து சாபபிடலாம். முதலுதவி மருந்து போல உதவி செய்யும் இந்த மூட்டு வலி கஷாயம்.உடல் நலனில் கவனம் செலுத்தவில்லையா?உடல் நலனில் கவனம் செலுத்த முடியாமல் விட்டுவிடுவார்கள். இவர்களுக்கு மூட்டு வலி அதிகமாகி மூட்டுத் தேய்மானமாக மாறி அறுவை சிகிச்சைதான் தீர்வு என்கிற நிலை கூட வந்துவிடும்.அதிகம் நடக்க வேண்டி இருக்கிறது, படி ஏறும் வேலையும் தினசரி இருக்கிறது. மூட்டுத் தேய்மானம் வந்துவிட்டது.இவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு சாப்பிடுகிறோமா என்கிற சந்தேகமும் வந்து விடுகிறது. இப்படிப்பட்ட தொந்திரவு சம்பந்தப்பட்ட பிரச்சனையை எவ்வாறு குணப்படுத்துவது என்று வரும்போது இந்த மூட்டு வலி கஷாயம்தான் தீர்வாக இருக்கிறது. மிகப்பெரிய அளவில் மூட்டு வலி மறைந்து குணமாகி விடும்.அதிகமில்லை… வெறும் 100 நாட்கள்…!ஒரு திருமணம், திருவிழா என்று சென்றுவிட்டு வந்தால் மூட்டு வலி வந்துவிடும். வலி நிவாரண மாத்திரையை எடுத்துக்கொள்வதை விட இந்த கஷாயத்தை 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் சாப்பிட்டு பாருங்கள். நல்ல குணம் தெரியும். ஒரு டெயிலர் 20 வருடங்களாக துணி தைய்த்துக்கொண்டு இருக்கிறார். ஒரு அம்மா தினம் 6 பேருக்கு சமைக்கும் சூழலில் இருக்கிறார் என்றால், இவர்களுக்கு கழுத்து எலும்புகளும் இடுப்பு எலும்புகளும் வலி பின்னி எடுக்கும். இவர்கள் மூட்டு வலி கஷாயத்தை 100 நாட்களுக்கு பருகி வரலாம். மூட்டு வலி கழுத்து வலி, கணுக்கால் வலி இவைகள எப்படித் தீர்ப்பது என்ற கேள்வி வரும். நிறைய பெண்கள் சரியான நேரத்தில் ஒரு சிகிச்சையாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் வலி வேதனை அதிகமாகிவிடும். கை தோள்பட்டை வலி, விரலின் இயக்கம் குறைந்து வலி, இடுப்பு வலி, பிட்டப்பகுதி வலி, கால் விரல் இயக்க சமயத்தின் போது கூட கடுமையான வலி என்று அவதிப்படுவார்கள். இவைகளை குறைக்கும் அருமருந்து மூட்டு வலி கஷாயம்தான்.பல பிரச்சனை..ஒரு தீர்வு!மூட்டு வலி கஷாயம் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பாட்டி இருக்கும் வீடுகளில் இது இருக்கிறது.மூட்டு வலி முதுகுத் தண்டு வலி கழுத்து வலி, சர்க்கரை நோயால் உண்டாகும் தோள் பட்டை வலி கவுட் என்கிற மூட்டு வலி சயாடிகா எனப்படும் முதுகுத்த தண்டு வலி, முடக்குவாதம், குதிகால் வீக்கம் வலி, தசை அதிக அழுத்தம், அதிக வேலை செய்வதால் ஏற்படும் வலிகள் என்கிற பிரச்சனையில் இருக்கும் அனைவருக்கும் வீக்கம் குறைந்து வலி குறைந்து உடலின் ஆரோக்யம் மேம்பட மிகப்பெரிய அருமருந்து இந்த மூட்டு வலி கஷாயம். Share on Facebook Tweet Follow us Share Share Share Share Share Newsletter Signup In this article: Don't Miss:Understanding the roots and the cure Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Health Remedy For Gout (Arthritis) Joint & Spinal Pain Change Your Lifestyle to Beat Diabetes Diabetes காலையில் எழுத உடனே தும்மல் வந்து கொண்டே இருக்கிறதா ? இதோ அதற்கு வீட்டிலிருந்தே தீர்வு TAMIL The Ayurvedic remedy for Gastric Problems Gastric Problems