எலுமிச்சம்பழம் உணவாக மருந்தாக மட்டுமல்லாமல், சுப அசுப நிகழ்ச்சிக்கும் பயன்படுகிறது. எலுமிச்சை மரத்தில் முட்கள் இருக்கும். எந்த தாவரத்தில் முட்கள் உள்ளதோ, அந்த தாவரம் புற்று நோயை தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டு உள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் எலுமிச்சையின் இலை, பழம், சிறு காய்கள், பழங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கிறது. எலுமிச்சை சாறை ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட உணவாக பயன்படுத்துவது 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டறியப்பட்ட ஒரு விஷயம். எலுமிச்சையை மருந்தாக பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உணவாகவே பயன்படுத்தலாம். . எலுமிச்சையை புத்துணர்வு தரக்கூடிய பழம் என்று சொல்வதுண்டு.
டான்சில்ஸ் இருந்தால் இதை செய்யுங்க….!
வாயில் புண்கள், பற்களின், ஈறுகளின் பாதிப்பை குறைக்க வல்லது இந்த எலுமிச்சை பழம். ஆயுர்வேத மருத்துவ முறையில் வாய் புண்கள், டான்சில்ஸ் இருந்தால் எலுமிச்சை சாறு 10 சொட்டுக்கள் வெந்நீரில் கலந்து வாய் கொப்புளிக்க சொல்லுவோம். உடனே தொற்று குறைந்துவிடும், அடிக்கடி தொண்டை வலி வருகிறது என்றால் 10 சொட்டு எலுமிச்சை சாறு வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் கிருமிகள் அழிக்கப்பட்டு வலி குறைவதில் முன்னேற்றம் காணப்படும்.
எலுமிச்சை ஒத்துக்காதா?
சிலருக்கு மூக்கில் இருந்து தண்ணீர் தாரை தாரையாக கொட்டும். வயதானவர் ஒருவரை அழைத்துக்கொண்டு அவரது மனைவி வந்திருந்தார். சார் இவருக்கு காலையில் எழுந்ததில் இருந்து பகல் 11 மணி வரை மூக்கில் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும். ஒரு பெரிய டவலை கொடுத்து விடுவேன். அது நனைந்த பிறகுதான் மூக்கில் தண்ணீர் கொட்டுவது நிற்கும். பின்பு மறுநாள் காலை ஆரம்பித்துவிடும் என்று சொன்னார். 10 மிலி எலுமிச்சை சாறை 200 மிலி வெந்நீரில் கலந்து குடிக்க சொன்னபோது, அய்யயோ எனக்கு எலுமிச்சை ஒத்துக்காது என்று சொன்னார். 10 நாட்கள் குடித்து பாருங்கள்…11 வது நாள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் விட்டு விடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அவருக்கு மூக்கில் இருந்து தண்ணீர் கொட்டுவது 10 நாட்களில் 40 சதவிகிதம் குறைந்து இருந்தது என்று சொன்னார். பிறகு தொடர்ந்து செய்துவர 3 மாதங்களில் முற்றிலுமாக நின்று போனது.
தலைமுடிக்கு நல்லது எலுமிச்சை
ஆஸ்துமா நோயாளிகள் தங்களுக்கு எலுமிச்சம்பழம் ஒத்துக்கொள்ளவே ஒத்துக்கொள்ளாது என்று நினைத்து இருப்பார்கள். அவர்கள் 10 மிலி எலுமிச்சை சாறை 200 மிலி வெந்நீரில் கலந்து குடித்து வர ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும். மலச்சிக்கல் இருப்பவர்கள் எதாவது ஒரு வேளை 20 மிலி எலுமிச்சை சாறு எடுத்து 200 மிலி வெந்நீரில் கலந்து குடித்து வர மலச்சிக்கல் இருக்காது. வாயு, வாத பிரச்சனைகள் இருக்காது.எலுமிச்சை தலைமுடிக்கு நல்லது,