விதம் விதமான சமையலில் புதினா உணவு உலக அளவில் பிரசித்தம். புதினாவை வாசனை திரவியமாக பார்க்கிறோம்.புதினா பசியைத் தூண்டக்கூடிய இயற்கையான அருமருந்து. புதினா வாதத்தைக் கட்டுக்குள் வைக்கும், வயிற்றில் உண்டாகும் வாயுவைக் குறைக்க கூடிய அருமையான மருந்து. புதினா. வயிற்றின் அமிலத்தன்மையை குறைத்து காரத்தன்மையை அதிகப்படுத்தும். மருந்தாக பயன்படுத்தினால் புதினா சாறு 30 மிலி அளவுக்கு அல்லது விழுது எடுத்து கொட்டைப்பாக்கு அளவு மருந்தாக பயன்படுத்தலாம், மனம், செரிமானம் சம்பத்தனப்பட நல்ல விஷயங்களுக்காகவும், மனதில் மகிழ்ச்சியை தூண்டக்கூடிய மூலிகையாகவும், புதினா இருக்கிறது.
ஐயையோ….வாய் துர்நாற்றம்!
நிறைய இளைஞர்கள் நல்ல பதவியில் இருப்பவர்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறது. ஒரு மீட்டிங்கில் பேசினால் கூட கேலி செய்கிறார்கள். இதை போக்க என்ன வழி என்று கேட்பார்கள். அவர்களுக்கு ஒரு 10 புதினா இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு விட்டு, தண்ணீர் குடித்து விடுங்கள், இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வாய் துர்நாற்றம் மறைந்து போய்விடுமென்று சொல்லி, அவர்களும் அதை செய்து பலன் அடைந்ததாக கூறுவார்கள்.
தினம்தோறும் புதினா!
வயிறு எரிச்சல் என்று ஹைப்பர் அசிடிட்டி மாத்திரைகள் சாப்பிட்டு வருவார்கள். இவர்கள் சாப்பிடும் மாத்திரைகளில் பாண்டஸிட் மாத்திரை சிறுநீரக செயல் இழப்புக்கு வழி வகுத்துவிடும். வலி மாத்திரை மட்டும்தான் இவ்வாறு செய்யுமென்று நினைப்பார்கள், அப்படி இல்லை இந்த பாண்டஸிட் மாத்திரை சிறுநீரக்கத்தை செயல் இழக்கவும் வைத்துவிடும். வயிற்று எரிச்சலால் அவதிப்படுபவர்கள் தினமும் 100 மிலி புதினா சாற்றை எந்த நேரத்திலும் தினம் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் தெரியும். பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்று அமிலம் சுரந்து புளிப்பு சுவையுடன் நெஞ்சு கரிப்பது சரியாகும்.
இளமை ஊஞ்சலாடும்
பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வயிற்று வலி, ஒற்றைத் தலைவலியுடன் ஏற்படும் கடுமையான வாந்தி இதற்கு புதினா சாற்றை மாதவிலக்கு காலங்களில் தொடர்ந்து பருகி வந்தால் உடனே தலைவலி, வயிற்றுவலி, வாந்தி நிற்கும். இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் புதினா சாற்றை தினம் ஒருவேளை பருகி வந்தால் இளமை ஊஞ்சலாடும்.
மாத்திரைகள் சாப்பிடுவதால் உண்டாகும் பக்கவிளைவுகளைத் தடுக்க புதினா சாப்பிடுங்கள்!
நிறைய பேருக்கு உடல் உபாதைகளுக்கு என்று சாப்பிட்டு வரும் மாத்திரைகளால் உடல் உறுப்புக்களுக்கு பிரச்சனை வந்துவிடும். உதாரணத்துக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், சிறுநீர் பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருவார்கள். இவர்களுக்கு உடல் உறுப்புக்கள் அழற்சி என்கிற பிரச்சனையைத் தவிர்க்க முடியாது. இதை எவ்வாறு இயற்கை காரணியைக் கொண்டு தவிர்க்க முடியும் என்று பார்த்தால் புதினா ஒரு வரப்பிரசாதம். புதினா கைப்பிடி எடுத்து 200 மிலி தண்ணீர் சேர்த்து மிக்சியில் அடித்து வடிக்கட்டிய சாறு ஒரு டம்ளர் தொடர்ந்து 3 மாதம் குடித்து வந்தால் மாத்திரைகளின் பக்க விளைவுகள் இருக்காது. உடலில் சுறுசுறுப்பு கூட கூடியிருக்கும்.
அலர்ஜி…ஆஸ்துமா…முடக்குவாதம்… புதினா தடுக்கும்!
புதினா அதன் வாசனை, சுவைக்கு மட்டும் இல்லாமல். உடலின் ஆரோக்கியத்துக்கு முக்கிய மூலிகை என்று சொல்லலாம். வாரத்தின் 7 நாட்களும் அசைவ உணவுகள் சாப்பிட்டும்,உடலில் சர்க்கரை அளவு கூடவில்லை, உடலில் கொழுப்பு சேர்வதில்லை, உடல் எடை கூடுதல் என்கிற பிரச்சனை இல்லாமல் இருக்கிறார்கள் என்று கண்டு அவர்களிடம் ஆய்வு நடத்தியதில், அசைவ உணவில் புதினாவை சேர்த்து சாப்பிடும் வழக்கம் அவர்களிடையே இருப்பதை கண்டறிந்தேன். புதினா உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுத்து, நைட்ரஜன் சம்பந்தப்பட்ட காரணிகளை வெளியேற்றி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயதாகும் போது உண்டாகும் ஜீரியாட்ரிக் பிரச்சனைகள், பார்க்கின்சன். அலர்ஜி, ஆஸ்துமா. முடக்குவாதம் பிரச்சனைகளையும் புதினா தடுக்கிறது.