தொப்பை குறைய வேண்டும் 0 சைஸ் வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது?
ஆசை மட்டும் இருந்தால் போதுமா?அதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டாம்? இதோ அதற்கான வழிமுறைகள்….மலச்சிக்கல், ஜீரணமின்மை செரிமானமின்மைக்கு கூட இந்த மலமிளக்கி சூரணம் சிறந்ததாக இருக்கும்.
மேற்கண்ட சூரணங்களை ஒன்றாக கலந்து வைத்து காலை இரவு உணவுக்கு முன்பு வெந்நீரில் கலந்து பருகி வாருங்கள்.
வயிற்று பிரச்சனைகள் தீரும்:
இந்த சூரணத்தை சாப்பிட்டு வந்தால், வயிறு உபாதைகள் மட்டும் இல்லாமல் வயிற்று ஆரோக்கியம் மேம்படும். காலையில் எழுந்தவுடனே மலம் கழிக்க முடியவில்லை என்றால் டென்சன் ஆகிவிடுவோம். இரவு படுக்கும்போது ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு படுங்கள். பசியின்மை, ஜீரணமின்மை மாறி, பசி இருக்கும் ஜீரணமாகிறது. காலையில் கழிவுகள் முறையாக சென்று விடுகிறது என்றால் இதை விட ஆரோக்கியம் ஒன்றும் இல்லை. குழந்தைகள் காலையில் மலம் கழிப்பதில்லை. மாலை வந்த பிறகு அல்லது இரவு உணவு சாப்பிட்ட பிறகுதான் மலம் கழிக்க போவார்கள். கழிவு வெளியேறவில்லை என்றால் நோய் வாய்ப்பு. அதிகமாகும்.
வீட்டில் இருக்கும் வயதானவர்கள்…
வீட்டில் 80 வயசு பெரியவர்கள் இருந்தால் மலச்சிக்கல் என்றால் அவர்களுக்கு டென்சன் என்று பிரச்சனை இருக்கும். மலம் கழிந்துவிட்டது என்றாலே ஜம்முனு இருப்பார்.
தொப்பைக்கு பைபை….!
45 வயது 50 வயது தொப்பையை குறைக்க வேண்டும். தொப்பை பெரிதாகக் இருக்கிறது. என்று கவலையுடன் இருப்பார்கள் அவர்கள் இந்த சூரணத்தை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் 3 மாதத்தில் வயிறு சுருங்கி போயிருக்கும். தொப்பை குறைய உதவி செய்யும் அருமருந்து இந்த சூரணம்.
உடலை சுத்தப்படுத்தும் சிகிச்சை….
உடம்பை சுத்தப்படுத்தும் சிகிச்சை செய்யும்போது மலம் மஞ்சள் நிறத்திலும், அடுத்து கருப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும், அடுத்து பச்சை கலந்த மஞ்சள் நிறத்திலும் கழியும். கடைசியாக தண்ணீர் மட்டும்தான் வரும். இப்படி சுத்தம் செய்தால் தீர்க்க முடியாத எவ்வளவோ நோயை குணப்படுத்தலாம். மன உளைச்சல்… எல்லா மருந்தும் சாப்பிட்டும் தோல் நோய் குணமாகவில்லை. உடலை சுத்தப்படுத்த என்ன தேவை என்று பார்த்தால் மலம் இளக்கி சூரணத்தை சாப்பிடும்போது குணம் கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் கை, கால் , உடல் மரத்து போகிறது என்று சொல்லி வருவார்கள். அவர்களுக்கு இந்த் மலமிளக்கி சூரணத்தை கொடுத்தால் சரியாகிவிடும். .