Connect with us

TAMIL

TAMIL

அற்புத பலன்கள் தரும் சுடுகாட்டு மல்லி அல்லது நித்தியகல்யாணி மூலிகை பற்றி தெரியுமா?

நித்தியகல்யாணி புற்றுநோய்க்கு மட்டுமா என்றால் இல்லை, உடலில் ஏற்படும் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

நித்தியகல்யாணி புற்றுநோய்க்கு மட்டுமா என்றால் இல்லை, உடலில் ஏற்படும் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

வளர்ச்சிதை மாற்றம், நிணநீர் சுரப்பி மேம்பாட்டுக்கு முக்கிய காரணியாக திகழ்கிறது. முழு தாவரத்தை மருந்தாக பயன்படுத்தலாம். சாறு அடர் பச்சை நிறமாக இருக்கும். 30 மிலி அளவுக்கு செடியின்  சாறு எடுத்து காலை, இரவு உணவுக்கு முன்பு எடுத்துக்கலாம். இலைகளை அரைத்த விழுது ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து காலை, இரவு எடுத்துக்கலாம். பச்சையாக கிடைக்கவில்லை என்றால் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி காலை, இரவு உணவுக்கு முன்பு பருகி வரலாம்.

புற்றுநோய் வந்துவிட்டதே என்று மனக்கலக்கமா?

பொதுவாக புற்று நோய் ஏற்படும்போது மனக்கலக்கத்துக்கு உள்ளாவோம். குணமாகுமா ஆகாதா , பிரச்சனையை  சரியாக்கலாமா? அறுவை சிகிச்சை கீமோதெரபி எடுத்துக்கொண்டாலும் 100 இல் 30 பேருக்கு மீண்டும் புற்று நோய் ஏற்பட்டுவிடும்.அப்படி புற்றுநோய்  மீண்டும் வராமல் இருக்க இது உதவி செய்யும் நித்தியகல்யாணி.இதன் வேர் மட்டும் எடுத்து 20 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயத்தை காலை இரவு உணவுக்கு முன்பு சாப்பிட்டால் நிச்சயமாக 90 சதவிகிதம் பலன் கொடுக்கும். பூ, இலை, வேர் அனைத்தையும் அரைத்து கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டாலும் பலன் தரும். மீண்டும் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க இது உதவி செய்யும்.

ஐந்து வகை சர்க்கரை நோய்…

ஐந்து வகை சர்க்கரை ஒன்று இன்சுலின் தேவைப்படும் சர்க்கரை நோய், அடுத்து இன்சுலின் இல்லாத சர்க்கரை நோய்,  கருவுற்ற தாய்க்கு, சர்க்கரை வந்து அது  குழந்தைக்கும் வந்துவிடுவது,, உடலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் சர்க்கரை. என்று ஐந்து வகை முதல் இரண்டு வகை என்கிற  சர்க்கரை நோயை மட்டும்தான் முதலில் ஒப்புக்கொண்டார்கள் . இப்போது  ஐந்து வகை. சர்க்கரை நோயையும் ஒப்புக்கொள்கிறார்கள். அதற்கு இந்த நித்தியகல்யாணி விழுதை காலை, மதியம், இரவு உணவுக்கு முன்பு  எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோயின் பக்க விளைவை பற்றி கவலைப்படவே தேவையில்லை.

சத்து மாத்திரை வேண்டாம்….

சித்த மருத்துவ புத்தகங்களில் வேறு வேறு நோயை குணப்படுத்தும் இந்த நித்தியகல்யாணி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நவீன மருத்துவ ஆராய்ச்சியும் நித்தியகல்யாணி மூலக்கூறு மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது என்று கண்டறிந்து உள்ளார்கள்.  சத்து குறைபாடு இந்த மாத்திரை அந்த மாத்திரை என்று சாப்பிட்டாலும் பலன் இல்லை. ஆனால், இந்த நித்தியா கல்யாணி  சாறு அல்லது விழுது சாப்பிடும்போது உடலில் ஆரோக்கியம் மேம்படும்.

ஐயோ…கருப்பையை எடுத்துவிடுங்கள்..

கருப்பை கட்டி.. தொந்திரவு தாங்க முடியவில்லை என்று புலம்பும் பெண்கள் கருப்பையை எடுத்து விடுங்கள்  என்று கூட  புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்..அப்படிப்பட்ட பெண்களுக்கு நித்திய கல்யாணியை சாறு அல்லது விழுதாக எடுத்து சாப்பிடக் கொடுத்து வர கருப்பை பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும்.

Newsletter Signup

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Health Remedy For Gout (Arthritis)

Joint & Spinal Pain

Change Your Lifestyle to Beat Diabetes

Diabetes

காலையில் எழுத உடனே தும்மல் வந்து கொண்டே இருக்கிறதா ? இதோ அதற்கு வீட்டிலிருந்தே தீர்வு

TAMIL

The Ayurvedic remedy for Gastric Problems

Gastric Problems

Newsletter Signup

Copyright © 2021

Connect
Newsletter Signup

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp