வீட்டில் வயதானவர்கள் இருந்தால் கோடைக்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையை சந்திப்பதை பார்க்கலாம்.
உடல் சோர்வு,அடுத்து ஜீரண மண்டல பிரச்சனை, மூன்றாவது தலைச்சுற்றல் பிரச்சனை. வர்டிகோ என்று சொல்லக்கூடிய பிரச்சனையை நீக்கும் கருப்பட்டி கஷாயம்.பற்றி இப்போது பார்க்கலாம்.
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து,100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி ,காலை, இரவு உணவுக்கு முன்பு பருகி வரவும். சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி சேர்க்க வேண்டாம்.
ஆண்களே…சாப்பிட பிடிக்கலையா?
ஆண்கள் அதிக வேலைப்பளு உணவில் நாட்டமில்லாமல், உடல் பலவீனம், நரம்புகள் பலவீனம் என்று அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த கருப்பட்டி கஷாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். ஆண்மைத் தன்மை நன்றாக இருக்கும். கருப்பட்டி கஷாயம் உடலின் பலமின்மையை நீக்கும் மருந்து.
உடல் புத்துணர்ச்சி…உறுப்புகளின் செயல்பாடு!
குழந்தைகளை காலையில் எழுப்ப முயற்சி செய்தால் உடல் அசதியாக இருக்கிறது என்று சொல்வார்கள். வயதானவர்கள் காலை உணவு முடிந்த பிறகு படுத்தால்தான் ஆச்சு என்று படுப்பார்கள். சாயங்காலம் 6 மணி ஆகிருச்சுன்னா உடலின் சத்துக்களை உறிஞ்சு எடுத்து விட்டது போல இருக்கு சார் என்பார்கள். இவை நோய் உருவாகும் போது உடலில் ஏற்படுத்தும் அறிகுறிகள். ரத்த சோகை, தைராய்டு, மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு உடல் சோர்வு மிகப்பெரிய அறிகுறி. நோய் வருவதற்கான வழிமுறைகளா,, அறிகுறிகளா என்று பார்த்தால், உடல் பலத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு இந்த கருப்பட்டி கஷாயம் மிகச்சிறந்த மருந்து.உடலின் ஆரோக்கியம் மேம்படும். உடல் சோர்வு தீர்ந்து போகும். ஆண்கள் பலவீனம், இனப்பெருக்க மண்டல உறுப்புக்கள் எழுச்சியின்மை, விந்து முந்துதல் எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் மாற்றம் இல்லை என்று இருப்பவர்களுக்கு உடல் பலத்தின் அளவு அதிகரித்தால் மட்டும்தான் இது சரியாகும்.உடல் பலம் குறைந்து போனால் ஸ்டாமினா வேலை செய்யும் திறன் மாறுபடும். குழந்தையினமை பிரச்சனையோடு வருவார்கள். முதலில் உடலின் பலத்தில் மாற்றம் தேவை அதற்கு இயற்கை மருந்து இந்த கருப்பட்டி கஷாயம்தான்.ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்ச்சி, உறுப்புக்களின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள்.