கருஞ்சீரகம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதன் மருத்துவ குணம் மிகச்சிறப்பானது. சமயம் சம்பந்தப்பட்ட நூல்களில் கருஞ்சீரகம் குறித்த குறிப்புக்கள் இருக்கின்றன. தொன்று தொட்டு அனைத்து சமயம் சார்ந்த குறிப்புகளிலும் இந்த மூலிகை இடம்பெற்று இருக்கிறது. கிறித்தவம், இஸ்லாமியம்,பவுத்தம், இந்து மதங்களில் மட்டும் இல்லாமல் கிரேக்க சிலை வழிபாட்டு நூல்களில் கூட கருஞ்சீரகத்தின் மருத்துவ குணம் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. கருஞ்சீரகத்தை நாம் தினசரி பயன்படுத்தும்போது எவ்வாறு நமது ஆரோக்கியம் மேம்படுகிறது என்கிற குறிப்பு. பிரமிடு குறித்த அகழ்வாராய்ச்சியில் கூட இருக்கிறது.
கருஞ்சீரகத்தை எவ்வாறு மருந்துக்கு பயன்படுத்துவது? இது எங்கு கிடைக்கும்?
கருஞ்சீரகம் சூப்பர் மார்க்கெட் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கருஞ்சீரகத்தை மிக்சியில் பொடித்து துணியில் சலித்து சூரணமாக பயன்படுத்தலாம். இந்த சூரணத்தை அப்படியே வாயில் போட்டு தண்ணீர் சேர்த்து சாப்பிட கஷ்டமாக இருந்தால், நெல்லிக்காய் அளவு உருண்டை செய்து மாத்திரை போல நேரடியாக விழுங்கலாம்.. அரைகிலோ கருஞ்சீரகத்தை வாங்கி வந்து, மிக்சியில் பொடித்து, சுத்தமான வெள்ளைத் துணியில் சலித்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு காலை, இரவு சாப்பிட்டு வரலாம். ஆடாதோடை, சுக்கு போன்றவைகளை மருந்துகளாகத்தான் சாப்பிட பரிந்துரை செய்கிறோம். ஆனால், இந்த கருஞ்சீரகம் உணவாக சாப்பிடும் வகையில் இஸ்லாமிய குறிப்புக்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. மருந்து இல்லாத ஆரோக்கிய வாழ்க்கைக்கு, வலி இல்லாத வாழ்க்கைக்கு என்று உணவு முறைகளில், வாழ்வியல் முறைகளில், அன்றாட உணவுப் பழக்க வழக்கங்களில் கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது.
சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோய் மட்டும்தானா?
சர்க்கரை நோய், 50 வருடங்களுக்கு முன்னர் பணக்கார நோய், இது வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் வரும் என்கிற நிலை இருந்தது. ஆனால், இன்று ஏழை, எளியவர் என்று அனைவருக்கும் வருகிறது.குழந்தையின்மை லட்சத்தில் ஒருவருக்கு என்று இருந்த நிலை மாறி, இன்று 50ல் ஒருவருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது.. என்ன காரணம்? தவறு நமக்கு மட்டும்தானா என்று பார்த்தால், முன்னோர்கள் காலத்திலும் இது இருந்திருக்கக் கூடும். ஆனால், இதைத் தவிர்க்கும் பழக்க வழக்கம், உணவு முறைகளை சொல்லிக்கொடுத்து முன்னோர்கள் வழிக்காட்டி, வாழ்ந்து இருக்கிறார்கள். அந்த வகையில் கருஞ்சீரகம் மிக முக்கியமான மருந்து. ஜீரண மண்டல பிரச்சனை, பசியின்மை, வயிறு உப்பிசம், தொப்பை, மலச்சிக்கல், குழந்தை பிறந்த பிறகு வயிறு பெரிதாக இருப்பது. பெண்களுக்கு கருமுட்டைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை கட்டிகள், கருப்பை குழல் அடைப்பு, மாதவிடாயின்போது அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் என்று இன்று இருக்கிறதே… ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இதற்கு என்ன சிகிச்சை? அவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்ததா? என்று பல கேள்விகள் நம்முள் இருக்கின்றன. இருந்தது, அவர்கள் இயற்கை உணவு முறை கொண்டு தீர்த்து கொண்டார்கள். அதில் கருஞ்சீரகமும் முக்கிய பங்கு வகித்து இக்கிறது.ஒரு தேக்கரண்டி, அல்லது 5 கிராம் கருஞ்சீரகப் பொடியை சாப்பிட்டு பாருங்கள் மாதவிலக்கு, தைராய்டு, கருமுட்டைப்பை நீர்க்கட்டி, மெனோபாஸ் உதிரப்போக்கு, மெனோபாஸ் காலத்தில் மனதளவில் ஏற்படும் கடுமையான அழுத்தம் குறையும். ஹார்மோன் ரீ பிளேஸ்மென்ட் தெரபியை நிறுத்தி, இந்த கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் ரீ பிளேஸ்மென்ட் தெரபி பலன்கள் கிடைத்துவிடும்.
இயற்கை முறை ஹார்மோன் ரீ பிளேஸ்மென்ட் தெரபி!
மருத்துவமனைகளில் செய்துக்கொள்ளும் ஹார்மோன் ரீ பிளேஸ்மென்ட் தெரபியை அவாய்டு செய்து, இயற்கையாக வீட்டிலேயே ஒரு 5 கிராம் அளவுக்கு கருஞ்சீரகத்தை காலை, இரவு சாப்பிட்டு வந்தால் அதுதான் இயற்கை முறை ஹார்மோன் ரீ பிளேஸ்மென்ட் தெரபி. கருஞ்சீரகத்தை காலை இரவு எடுத்துக்கொள்ளும்போது இனப்பெருக்க குறைபாடுகள், தைராய்டு கோளாறுகள் குறையும். உணவாக பயன்படுத்தும் மிகச்சில மருந்துகளில் இந்த கருஞ்சீரகம் முக்கிய இடத்தில் உள்ளது. ஆண்களுக்கு மன அழுத்தம், பணி நிமித்தம் என்று உடல் பயிற்சியில் கவனம் செலுத்த முடியாமல் போகும்போது, உடல் பருமன், பிராஸ்டேட் என்லார்ஜ் மென்ட் போன்ற பிரச்சனைகள் வந்துவிடும்.தவறு எங்கே நடந்தது ஆராயாமல், பிரச்னைக்கு என்ன தீர்வு, எது மருந்து என்று பார்க்க வேண்டும். தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது, மருந்து வேலை செய்யவில்லை என்பார்கள். இவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வரலாம்.
தூக்கமின்மை என்று வரும்போது சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு என்று அர்த்தம். பகல் நேரம் தூக்கம் அதிகம் இருக்கிறது என்றால் இதய நோய் வருவதற்கான காரணம் என்று அர்த்தம். இதை எப்படி தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று பார்த்தால் அதற்கு இந்த கருஞ்சீரகம் நல்ல மருந்து. காலை, இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், பாதிப்பு ஏற்படுத்தும் காரணி ஏற்படாமல் முன்னேற்றம் காண முடியும். முதல் குழந்தை பிறந்துவிட்டது, இரண்டாவது குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடமாக பிளான் செய்தும் குழந்தையின்மை இருக்கிறது. ஆனால், உடலில் எந்தவிதமான மருத்துவ பிரச்சனையம் இல்லை, என்பார்கள். இவர்களுக்கு இந்த கருஞ்சீரகம் நல்ல மருந்து வெந்நீருடன் காலையிலும், இரவு பால் கலந்து ஆணுக்கும் கொடுத்து வந்தால் கரு தங்கும். சிறுநீரக கற்கள், சிறுநீரக செயல் குறைபாடு என்று அப்பாவுக்கும், சகோதரருக்கும் இருக்கிறது. இது எனக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள்.இந்த கருஞ்சீரகம் சாப்பிட்டு வரலாம்.உடலின் அமிலத்தன்மை மாற்றம் புற்று நோயைக் கொண்டு வரும். கருஞ்சீரகம் குறித்த ஆராய்ச்சியில் இதில் உள்ள ஆல்கலாய்டு ஐந்தில் அல்கலைன் இருப்பதை கண்டறிந்தார்கள். உடலில் காரத்தன்மை மெயின்டெயின் ஆக அல்கலைன் முக்கியத்தேவை. இந்த அல்கலையினால் பாக்டீரியா மட்டும் அல்ல புற்று நோய் செல்கள் கூட வாராது. அல்கலைன் நேச்சரை உடலில் கொண்டு வர முக்கியத் தேவை இந்த கருஞ்சீரகம்தான்.எனவே, கருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பேணுங்கள்!