முகத்தில் பருக்கள், தலையில் பொடுகு, முகத்தை மட்டும் பாதிக்கும் பருக்கள், உடல் முழுவதும் பரவி இருக்கும் பருக்கள் என்று எந்த வகையானாலும் சரி, இதற்கு தடவப்படும் மேல் பூச்சுக்கள் தோலின் அழகையே கெடுத்தகுவிடும்.
இதற்குத் தீர்வு தரும் முகப்பரு கஷாயம் பற்றி பார்க்கலாம்.
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை ஒருவேளை உணவுக்கு முன்பு, இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.
பலாப்பழ முள் போல…
முகப்பருக்கள் நிறைய வகை..அதில் முகத்தில் மட்டும் 8 வகை முகப்பருக்கள் உண்டாகின்றன. வாதத்தால் வரும் முகப்பரு பலாப்பழம் முள் போல இருக்கும். இது உடையவும் உடையாது சீழும் வராது. பித்தத்தால் வரும்முகப்பரு ஒரு நாள் மதியம் இருக்கும். பிறகு வெடிச்சுரும் அடுத்த நாள் வேறு இடத்தில் இது போல உருவாகும். கபத்தினால் உண்டாகும் முகப்பரு ஒவ்வொன்றும் கட்டி போல இருக்கும். முகத்தில் நெற்றி, மூக்குக்கு பக்கத்தில், காதுக்கு பக்கத்தில் கட்டி போல உருவாகும். வலி இருக்காது. சீக்கிரம் கட்டி உடையாது. இப்படி எட்டு வகை முகப்பருக்கள் உள்ளன.
ஒரே வீட்டில்…
ஒரே வீட்டில் அக்காவுக்கு பரு வந்து நல்லா போச்சு.அதே பூச்சுத்தான் தடவினேன்..எனக்கு சரியாகலை என்று வருகிறவர்கள் பலர். ஆனால், அக்காவுக்கு எந்தவகை இவருக்கு என்ன வகை முகப்பரு வந்தது என்று ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். 8 வகையான முகப்பருக்களை நீக்கக் கூடிய அருமருந்து இந்த முகப்பரு கஷாயம். ஆணோ, பெண்ணோ முக அழகில் காம்பரமைஸ் செய்து கொள்ள முடியாதுதான்.முக அழகில் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். முகத்தில் பருக்கள் உண்டாகி அது மெல்ல மெல்ல கழுத்து மார்பு, முதுகுப் பகுதி என்று பரவிக்கொண்டே இருக்கும். அரிப்பு சொறிந்தால் ரத்தம் என்று கூட பிரச்சனை கிளப்பி விடும். முகத்தில் தழும்புகளாக கூட மாறி முக அழகை கெடுத்து விடும்.இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு அரு மருந்து இந்த முகப்பரு கஷாயம்.
தன்னம்பிக்கை குறைந்ததே….
பெரிய படிப்பு படித்து யுனிவர்சிட்டி கோல்டு மெடல் வாங்கிய ஒருவர் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதாக பெற்றோர் கூட்டிக்கொண்டு வந்தனர். வேலைக்கு போக விருப்பம் இல்லை என்று சொன்னார் அந்த பையன். என்ன காரணம் என்று தனிமையில் விசாரித்தபோது, நெற்றியில் தலைமுடியை நீக்கி காண்பித்தார். பலாப்பழத்தின் முற்கள் போல பருக்கள் நிறைய இருந்தது. அவருக்கு 6 மாத காலம் எனக்கு டைம் கொடுங்கள் என்று சொல்லி, இந்த முகப்பரு கஷாயத்தைத்தான் பருகி வர சொன்னேன்.கூடவே மன அழுத்தத்துக்கு மனோதிட பயிற்சிகள் ரத்த சுத்தி உணவு முறைகள் பற்றியும் சொல்லிக்கொடுத்து அனுப்பி வைத்தேன். 6 மாத காலம் பருகிய பின்னர் அவருக்கு சுத்தமாக முகப்பருவே இல்லை. இப்போது கல்லூரியில் புரஃபஸராக இருக்கிறார். முகப்பருக்களை வெளியில் வாங்கித் தடவும் வெளிப்பூச்சுக்களுடன் இந்த கஷாயத்தை ஒப்பீடு செய்து பாருங்கள், கொஞ்சமும் ரசாயனம் இல்லாத அருமருந்து இந்த முகப்பரு கஷாயம்.