கொத்தமல்லியை வெறும் வாசனைக்கு என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். கொத்தமல்லி இலை சாறு சிறுநீரகத்தையும் சுத்தப்படுத்துகிறது, சிறுநீரக அடைப்புக்களை சரி செய்கிறது.கிரேக்க நாடுகளில், ரோமன் நாடுகளில் கொத்த மல்லி கீரை பற்றிய குறிப்புக்கள் வரைபடங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இடம்பெற்று இருக்கின்றன.வணிகத்தில் தங்கத்தை கொடுத்து கொத்த மல்லியை வாங்கின சரித்திரமும் இருக்கிறதது..கொத்து மல்லியை பச்சைக் கீரையாகவும், உலர்ந்த விதைகள் தனியாவாகவும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.மிளகாய்ப் பொடி அரைக்கும்போது மிளகாயின் கார குணத்தைக் குறைக்க தனியாவை சேர்த்து அரைக்கும் வழக்கம் உள்ளது.
வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் குணமாக….!
கொத்தமல்லைக் கீரையை அரைத்த விழுதாகவோ, அல்லது சாறு எடுத்தோ நேரடியாக மருந்தாக பயன்படுத்தலாம்.
‘
ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதையை எடுத்து தண்ணீரில் போட்டு ஊறவைத்துவிட்டு, அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல், மலம் கழிக்கும்போது ஏற்படுகின்ற எரிச்சல் குணமாகும்.
செரிமானத்தை தூண்டும் கொத்தமல்லி!
கொத்தமல்லி கீரை செரிமானத்தை தூண்டுவதாக இருக்கிறது . சிறுநீரக அழற்சி, சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கிறது சிறுநீர் கழிக்கும்போது உடலுக்கு தேவையான புரோட்டீன் போன்ற சத்துக்களும் வெளியேறிவிடும். இதற்கு ஒரு தீர்வாக இருக்கிறது கொத்தமல்லி கீரை இதனை சாறாக எடுத்து தினம் பருகிவந்தால் இது போன்ற பிரச்சனைகள் தீரும். சிறுநீரகப் பையில் தசை மாற்றங்கள் விரிவுத் தன்மையை குறைத்து அங்கு யூரின் தங்குவதால் யூரினரி டிராக் இன்ஃபெக்ஷன் என்று அவதிப்படுவார்கள் அவர்கள் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லிக் கீரையை எடுத்து 200 மில்லி சாறு எடுத்து 48 நாட்கள் பருகி வந்தால் சிறுநீரக அழற்சி, சிறுநீரில் புரதம் வெளியேறுவது, சிறு நீரகப்பை சுருக்கம், சிறுநீரக அடைப்பு ஆகிய பிரச்சனைகள் தீரும்.