அடடே….ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறுபூனைக்காலி!
சிறு பூனைக்காலி கொடி வகைத் தாவரம். வேரை கண்டு பிடிப்பது கஷடம்.
காரணம் ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு செடி இருந்தாலும் அடர்ந்து படர்ந்து வளரும். இதன் இலை, காய், பூ, பழம்,விதை என்று அனைத்தும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.மேலை நாடுகளில் சிறுபூனைக்காலி சாறு ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
தும்மல் உடனடியாக அரெஸ்ட் ஆகும் பாருங்க….
முழு தாவரம் ஒரு கொட்டைப் பாக்கு அளவு அரைத்து எடுத்து மருந்துக்கு சாப்பிடலாம். தாவரத்தின் இலைச் சாறுதான் நான் பரிந்துரை செய்வேன். சத்து உடனே உடலுக்குள் சென்று நிவாரணம் தரும். கடுமையான அலர்ஜிடிக் சைனஸைட்டீஸ் தும்மல் என்று வருவார்கள்.இவர்களுக்கு இந்த சாற்றை கொடுத்தால் தும்மல் உடனே அரெஸ்ட் ஆகிடும்.
மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு…
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு கோளாறுகள், கருப்பை கோளாறுகளுக்கு சிறந்த மருந்து இந்த சிறுபூனைக்களி மூலிகை. 30 மிலி அளவுக்கு பழச்சாறு சாப்பிடலாம். பழத்தை அப்படியே சாப்பிடலாம். சிறுபூனைக்காலி பழத்தை ஊட்டச்சத்துக்காக மேலை நாடுகளில் உணவாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆஸ்தியரேலியா, கனடாவில் உணவாகவே பயன்பட்டு வருகிறது. மாதவிலக்கு பிரச்சனை கருமுட்டைப்பை நீர்க்கட்டிகளுக்கு அருமருந்து பூனைக்காலி மூலிகை. இலைகளை எடுத்து சாறு எடுத்து 50 மிலி அளவுக்கு காலை ஒருவேளை சாப்பிட்டு வர மாதவிலக்கு கோளாறுகளில் முன்னேற்றம் ஏற்படும்.
குழந்தை பிறந்த பிறகு…
குழந்தை பிறந்த பிறகு ஆறுமாதம். ஒரு வருடம் என்று கூட மாதவிலக்கு வராது. உடல் எடை அதிகரித்து விடும். டாகடர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்துங்கள் மாதவிலக்கு வந்துவிடும் என்று சொல்லுவார்கள். ஆரோக்கியமான வழியில் இந்த பிரச்சனைகளைக் குறைக்க இலையின் சாறு 30 மிலி எடுத்து 100 நாட்கள் சாப்பிட்டு வர படிப்படியாக மாதவிலக்கு பிரச்சனைகள் குறைந்து மாதவிலக்கு சீராகும். பெண்களுக்கு 35 வயதானால் கருப்பை வீக்கம். கருப்பை சுவர்களின் அடர்த்தி புற்று நோய்க்கும் வழி வகுக்கும். கருப்பையை எடுத்து விடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். கருப்பை எடுக்காமலே குணமாக்குவதற்கு அருமருந்து சிறு பூனைக்காலி இலையின் விழுது. கொட்டைப்பாக்கு அளவு இலையை அரைத்து எடுத்த விழுதை 100 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை தசையின் அடர்த்தி குறைந்துகொண்டே வரும். இந்த பிரச்னையை இயற்கையாக குறைக்கும் அருமருந்து சிறுபூனைக்காலி மூலிகை. இந்த தாவரத்தின் பூ கண்பார்வை குறைவு, கண் அழுத்தம் இவற்றுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. சிறுபூனைக்காலி பழத்தை பால் கலந்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வர கண்பார்வை கோளாறுகள்,, கண் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும். தகுந்த மருத்துவ ஆலோசனை படித்தான் இதை சாப்பிட வேண்டும்.