இன்றைக்கு பசியின்மை மிகப்பெரிய நோயாக உருவெடுத்து நிற்கிறது.
இல்லையா, பசிக்கிறது சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டுவிட்டேன் கொஞ்சம் கூட செரிமாணம் இல்லை, வயிற்றில்க் கல்லை போட்டு வைத்தாற் போல இருக்கிறது என்று சொல்லுவார்கள். ஜீரன மண்டல கோளாறுகள், உடல் சூடு, கண்கள் எரிச்சல், மலம் கழிக்கும் போது எரிச்சல் என்று உடல் சூடு பாடாய் படுத்துகிறது என்று கவலையில் இருப்பார்கள். அவர்களுக்கான அருமருந்தாக கோரைக்கிழங்கு கஷாயம் பற்றி பார்க்கலாம்.
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திய 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வைக்கவும். இதை காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரலாம்.
உடல் சூடு, பித்த உடம்பு பிரச்சனை,, செரிமான கோளாறுகளால் பிரச்சனை என்று அவதிப்படுபவர்கள் கோரைக்கிழங்கு கஷாயத்தை சாப்பிட்டால் குணமாகி விடும்.
நா உலர்ந்து போகுதல்….
உடல்சூடு பிரச்சனை, கண்கள் எரிச்சல், நா உலர்ந்து போதல், மோஷன் போகும்போது எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், எப்போதும் உடல் சூடாகி காய்ச்சல் இருப்பது போல தோன்றுதல் என்று பலருக்கும் அறிகுறிகள் இருக்கும். இந்த உடல் சூடு பெண்களுக்கு வெள்ளைப் படுதல், சில சமயம் வயிற்றில் இருக்கும் கரு கலைந்து போதல் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும்.
மெட்டபாலிசம்….
வளர்ச்சிதை மாற்றம் என்று சொல்லக்கூடிய உணவு உடலுக்குள் சென்று செரிமானம் ஆகுதல், உணவின் சத்துக்களை உறிஞ்சி கிரகிக்கின்ற அளவில் குடல் வேலை செய்தல் என்று இரண்டு வகையாக வளர்ச்சிதை மாற்றம் இருக்கிறது. நாளமில்லா சுரப்பி செயல்குறைபாடு, உடல் பருமன், என்று மருத்துவரிடம் சென்றால் ஒரே வார்த்தையில் மெட்டபாலிசம் குறைந்து விட்டது என்று சொல்லுவார்கள். இதைத்தான் வளர்ச்சிதை மாற்றம் என்று சொல்கிறோம். இதற்கு கோரைக்கிழங்கு கஷாயம் அருமருந்தாக செயல்படுகிறது. டைபாய்டு, மலேரியா காய்ச்சல், டெங்கு காய்ச்சல், இதெல்லாம் வந்து விட்டு போனபின் உடல் சரியாகிவிடும் என்று நினைத்தால் கூட உடலின் சோர்வு நம்மை பெரும் நோயாளிகளாக மாற்றி வைத்துவிடும். உடல் தேற்றி என்று கூட கோரைக்கிழங்கு கஷாயத்தை சொல்லலலாம். சோர்வு அசதி போக இந்த கோரைக்கிழங்கு கஷாயத்தை உணவுக்கு முன்பு காலையும் இரவும் சாப்பிட்டு வர வேண்டும். உடலில் அறுவை சிகிச்சை, கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை கைகால் முறிவு அறுவை சிகிச்சை என்று அறுவை சிகிச்சைகளுக்கு பின்னாலும் எரொபடும் உடல் சோர்வை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது கோரைக்கிழங்கு கஷாயம்.
இளம்பெண்கள் இளம்பெண்களுக்கு உணவில் நாட்டம் ஏற்பட…
சாப்பாட்டில் நாட்டமற்று கல்லூரிக்கும் பள்ளிக்கும், வேலைக்கும் வெறும் வயிற்றில் சென்று விடுவார்கள், அப்படிப்பட்ட பெண்களுக்கு இந்த கோரைக்கிழங்கு கஷாயத்தை இரு வேலையும் கொடுத்து வர உணவில் நாட்டம் ஏற்படும்