TAMIL

மூட்டுவலிகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் நிரந்தரமாக குணமாக்குவது எப்படி..?

மூட்டு வலி இல்லாத வாழ்க்கை வேண்டுமா?

மூட்டு வலி இல்லாத வாழ்க்கை வேண்டுமா?

மூட்டுவலி சிகிச்சை:

வலி இல்லாத வாழ்க்கை வேண்டும்.மூட்டு வலி, கை  கால் வலி, ச்ரவாங்கி வலி  என்று அவதிப்படுகிறோம். குறிப்பாக மூட்டு வலியால் அதிகம் பேர் துன்பப்படுகிறார்கள். மூட்டுவலி ஐந்து வகை என்று பார்க்கிறோம். முதல் நிலை திருமணம் எங்காவது போய்விட்டு வந்தால் படுக்கும்போது அப்பாடா என்று வலி இருக்கும். ஆனால், காலையில் எழுந்தால்  சரியாகிவிடும். இது முதல் நிலைமை, இரண்டாவது காலையில் எழும்போது மட்டும் கடுமையான வலி இருக்கும். ஐந்து நிமிடத்தில் சரியாகி விடுகிறது.வேலைகள் செய்துவிட்டு  திரும்ப உட்கார்ந்தால் வலி வந்துவிடும். இதுதான் மூட்டுத் தேய்மான ஆரம்ப நிலை .

மூன்றாம்நிலை…

மூன்றாம் நிலை குறிப்பிட்ட வேலைகள் செய்யும்போது மட்டும் கடுமையான வலி நிற்கும்போது, படிகள் ஏறி இறங்கும்போது வலி, இந்த நிலையில் மருத்துவரிடம் போவார்கள். உடற்பயிற்சி செய்ய சொல்லுவார்கள். நான்காம் நிலை மூட்டுக்களில் இயக்கத்தில் கடுமையான வலி குருத்தெலும்பு தேய்ந்து எண்ணெய் பசை  குறைந்து போய் இதிலும் சிகிச்சை எடுக்கவில்லை  என்றால் ஐந்தாம் நிலை மொத்த அமைப்பும் மாறி மூட்டுக்கள் வளைய ஆரம்பித்துவிடும். ஒரு மூட்டு மேல் இன்னொரு மூட்டு வைத்து படுக்கும்போது உரசி வலி எடுக்கும். இது ஐந்தாம் நிலை. இதற்கு சிகிச்சை என்று பார்த்தால், மூட்டுவலி ஆன் பெண் இருபாலாருக்கும் எதனால் வருகிறது என்று புரிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

தைராய்டு பிரச்சனைகள்…

தைராய்டு பிரச்சனைகள்,  உடல் எடை அதிகமாக இருத்தல், கறிகாய் கீரைகள் சாப்பிடுவதில்லையா? தண்ணீர் குடிக்காமல் இருக்கிறீர்கள் இல்லை நீங்கள் உட்காரும், படுக்கும் நிலை மாற்றி இருக்கிறதா. இதை மாற்றும் முறையை சொல்லிக் கொடுக்கும்நபோது.மூட்டுவலி சரியாகிவிடும்.  இராண்டாவ்து உணவு முறை மாற்றம். எந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டால் இந்த மூட்டு வலி குணமாகும் என்று சிகிச்சை அளிப்பது.மூன்றாவது உடற்பயிற்சி. உடலின் தசைகளில் பலம் குறையும்போது மூட்டுக்களின் தசை நார்கள் கிழிந்துவிடும்.இதை பலப்படுத்துவதுதான் மூன்றாவது சிகிச்சை.மனப்பயிற்சியும்  முக்கியம். நான்காவது  ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரசித்தி காரணமே பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்பதால்தான். மூட்டுக்களை பலமாக்கும்  பஞ்சகர்மா சிகிச்சை, அபியங்கம், எண்ணெய் தேய்த்து வர்ம புள்ளிகளைத் தூண்டுவது. இரண்டாவது ஒத்தடம், நாடிசுவேதம் மூன்றாவது மூலிகை கலந்த தண்ணீரின் ஆவியை வலி இருக்கும் இடங்களில் செலுத்துவது, இது குருத்தெலும்பு வளர்ச்சியைத் தூண்டும் சிகிச்சை நான்காவது . ஜானுவஸ்த்தி ஐந்தாவது பிழிச்சல் இயக்க குறைபாட்டினால் தசை அழற்சியை குறைப்பது தசைகள், நரம்புகள் தசைநார்கள் ரத்த குழாய்கள் பலப்படுத்த நவரக்கிழி சிகிச்சை. இதை 48 நாட்கள் எடுக்கும்போது மூட்டுக்களின் அமைப்பே மாறிவிடும். ஆரோக்கியத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம். அடுத்து ஆயுர்வேத காயகல்ப மருந்துகள், கீரைகள், பழங்கள், கொட்டைகள் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும் மருந்துகளிக் கொண்டு சிகிச்சை அளிப்பது. இதனால் மூட்டுக்களின் இயக்கம் சரியாகும். இந்த முறையான  சிகிச்சை திட்டத்தை குறைந்தது 6 மாதங்கள் அல்லது 18 மாதங்கள் வரை  எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் மேம்படும். சிகிச்சைக்கு முன் ஸ்கேன் சிகிச்சைக்குப் பின்னர் ஸ்கேன் எடுத்து பரிசோதித்துக் கொள்ள   முடியும்.

உங்கள் மருத்துவம் மட்டும் எப்படி?

கேரளா போனேன் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டேன் மூட்டு வலி குறையலை. உங்கள்து மருத்துவ முறை மட்டும் எப்படி குணமாகும் என்று கேட்பார்கள். உங்களுக்குண்டான மூட்டு வலியின் தன்மையை  புரிந்துக்கொண்டு சிகிச்சை அளிக்கும்போது நிச்சயம் சரியாகும். விழிப்புணர்வு, உடற்பயிற்சி, மனப்பயிற்சி, உணவில் சேர்க்க வேண்டிய பொருள் முறையான உட்புற மருந்துகள்,, வெளிப்புற மருந்துகள் என்று கொடுக்கும்போது நாட்பட்ட மூட்டு வலியாக இருந்தாலும் படிப்படியாக குணமாகும்.

Click to comment

Copyright © 2021