Hairfall

மருதாணி வைத்த மஹாராணி…!

மருதாணி வைத்த மஹாராணி…!

மருதாணி வைத்த மஹாராணி…!
திருமண நிகழ்ச்சி, சடங்கு, சுப நிகழ்ச்சிகள் என்று எது நடந்தாலும் பெண்கள் கைகளில் மருதாணி வைத்து இருப்பதை பார்க்க முடியும். மருதாணி பூ பூத்து குலுங்கும் நேரங்களில் மருதாணி செடிக்கு பக்கத்தில் 100 மீட்டர் தூரத்துக்கு எங்கிருந்தாலும் சுகந்த வாடை வீசி மனதை வசீகரிக்கும். மருதாணியின் விழுது, சாறு இரண்டுமே உட்புறம், வெளிப்புறமாக மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவதை பார்க்க முடியும்.
தூக்கம் வரவழைக்கும் மருதாணி பூ…
தூக்கத்துக்கு மருதாணி பூ மிகச்சிறந்த மருந்து. மருதாணி பூவை அரைத்து நெற்றியில் பூசினால் தூக்கம் வரும். இளமை, ஆரோக்கியம், மனதின் சந்தோஷத்துக்கு இயற்கை கொடுத்து இருக்கும் அருமருந்து மருதாணி. ஆயுர்வேதத்தில் உள்ளுக்கு மருதாணியை கொடுப்பது என்பது அவ்வளவாக இல்லை என்றாலும் யுனானி, சித்த மருத்துவத்தில் மிகப்பெரிய அளவில் உள்ளுக்கு மருந்தாக கொடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் தூக்கத்தை வரவழைக்கும் மருந்துகளில் மருதாணியும் ஒன்று.
மருதாணி பூ ஆய்வுகள்…
மருதாணி பூவில் இருக்கும் மூலக்கூறு பற்றிய ஆராய்ச்சியில் சீன பல்கலைக்கழகம் ஈடுபட்டது. உலகில் அதிகம் தூக்கம் இல்லாதவர்கள் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது.எனவே ஆராய்ச்சியில் மருதாணி பூவில் இருக்கும் ஒரு மூலக்கூறை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலே தூக்கம் வருகிறது என்று கண்டுபிடித்து இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருதாணி பூவை தலையணை அடியில் வைத்து படுத்துக்கொண்டால் நன்கு தூக்கம் வருவதாக முன்னோர்கள் அதை கடைப்பிடித்தனர்.
தூக்க ஆராய்ச்சி…
திருவனந்த புரத்தில் தூக்க ஆராய்ச்சி நிறுவனம், இயற்கை காரணிகளை வைத்து தூக்கத்தை வரவழைக்கலாம் என்கிற ஆராய்ச்சி மேற்கொண்டது. அதன்படி 50 பேருக்கு தூக்க மாத்திரை, 50 பேருக்கு மருதாணி பூவில் எடுத்த ஒருவித மூலக்கூறு கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டது. ஒரு மாதம் இப்படி செய்ததில் தூக்க மாத்திரை மூலம் தூங்கியவர்கள் மூளையின் அதிர்வலைகள் குறையவே இல்லை. மருதாணி மருந்தை உள்ளுக்குள் சாப்பிட்டு தூங்குபவர்கள் மூளை அதிர்வலைகளில் முன்னேற்றம் டீப் ஸ்லீப் என்று இருந்தது. எனவே இயற்கை முறையில் தூக்கத்தை உண்டாக்கும் அருமருந்து மருதாணி பூ.
தோல்நோய்க்கு…
தோல் நோய் பித்த வெடிப்பு, கை, கால் பாலம் பாலமாக வெடிச்சு போயிருக்கும். கிரீம் போட்டால் குறையும் பிறகு பார்த்தால் வெடித்து போகும். இதற்கு மருதாணி, கொட்டைப்பாக்கு இரண்டு சேர்த்து மைய அரைச்சு பேஸ்ட் எடுத்து ராத்திரி கை கால்களில் தடவி வாருங்கள். இப்படி 15 லிருந்து 30 நாட்கள் வரையில் செய்து வந்தால் பித்த வெடிப்பு எங்கு போனது என்றே தெரியாது. உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும்.
பெண் குழந்தைகளுக்கு…
40 இலைகள் மைய அரைத்து சரி சமமாக வாழைப்பழம் கலந்து பிசைந்து எடுத்து பொரி உருண்டை அளவு பெண் குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட கொடுத்து,3 லிருந்து 7 நாட்கள் அசைவ உணவு வேண்டாம் என்று பாருங்கள். வெள்ளைப்படுதல் கோளாறு நின்று போகும்.அதோடு மருதாணியை உள்ளுக்கு மருந்தாக கொடுத்தால் ஈரல் நோய்கள் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து போகும். தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருதாணியை உள்ளுக்கு மருந்தாக எடுத்துக்கொள்ள கூடாது

Click to comment

Copyright © 2021