PCOD

பெண்களுக்கு மெனோபாஸ் இயற்கையான நிகழ்வுதான்…. ஆனாலும் வேதனைகள்….?

மெனோபாஸ்

மெனோபாஸ்

பெண்களுக்கு மெனோபாஸ் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுதான் என்றாலும், மாதவிலக்கு காலம் முடிகின்ற நேரத்தில் உடல் எடை கூடுதல், உடலில் வலி, வேதனை செரிமானத்தில் மாறுபாடு, வயிறு உப்பிசம் பசியின்மை, அல்லது அதிகமாக ஜீரணம் ஆவது, கருப்பையில் கட்டிகள் என்று வியாதிகள் தரும் அதிக உபத்திரவங்களை கொடுக்கும். வாயு கோளாறு வயிறு உபாதைகள் இவை கூட என்ன செய்தும் பலன் கொடுக்கவில்லை என்பார்கள். இவை இரண்டுக்குமான பூவரசன் பட்டை கஷாயம்பற்றி இப்போது பார்க்கலாம்.

பூவரசன் பட்டை கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

பூவரசன் மரப்பட்டை சூரணம் 2 கிராம், மூக்கிரட்டை சூரணம் 2 கிராம், சுக்கு சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

நிறைய பெண்களுக்கு மாதவிலக்கு ஆரோக்கியமான விஷயமாக இல்லை.

பூவரசன் மரப்பட்டை கருப்பை கட்டிகள், உடல் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும். மாதவிலக்கு என்பது இயற்கை நிகழ்வாக இருந்தாலும் நிறைய பெண்களுக்கு மாதவிலக்கு ஆரோக்கியமான விஷயமாக இல்லை. உளுந்து மாவில் செய்த பலகாரங்கள், கேழ்வரகு உணவுகள், முருங்கை கீரை உணவுகள் இவைகளை பெண்கள் சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. கிராமப்புறங்களில் கொல்லைப்புறத்தில் முருங்கை மரம் இருந்தாலும் கூட அதை சமைத்து சாப்பிடுவது என்பதில் அதிக விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

100ல் 17 பெண்களுக்கு கருப்பை மண்டல நோய்!

100ல் 17 பெண்களுக்காவது கருப்பை மண்டல நோயால் அவதிப்படுவது, மாதவிலக்கு அதிகமாக போவது இல்லை மாதவிலக்கு ஆவதே இல்லை, உடல் வீக்கம் என்று அவதிப்படுகிறார்கள். 40 வயதில் இருந்து 50 வயது பெண்களில் 100ல் 4 பேராவது மாதவிலக்கு கோளாறுகளுக்காக கருப்பையை எடுத்து விடும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு இருப்பார்கள்.

எதுக்கு அவஸ்தை? எடுக்கலாமா கருப்பையை?

கருப்பை மண்டலத்தில் பிரச்சனை, கருப்பை கட்டிகள் அல்லது கருமுட்டைப் பை நீர்க்கட்டிகள் என்று சொன்னால், இரண்டு குழந்தைகள் இருக்கிறதா…எதுக்காக கஷ்டப்படறீங்க. பேசாமல் அறுவை சிகிச்சை செய்து கருப்பையை அகற்றி விடுங்கள். இல்லாவிட்டால் அது புற்று நோயாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லுவார்கள். புற்றுநோய் என்று உறுதி படுத்தப்படாமலேயே கருப்பையை அகற்றி விடுவார்கள். முன்பெல்லாம் இம்மாதிரி தொந்திரவுகள் இருக்கிறது என்றால், கட்டியை சோதனைக்கு உட்படுத்தி, பின்னர் அதற்கான தீர்வு என்று சொல்லுவார்கள், ஆனால், இப்போது எடுத்த உடனே அறுவை சிகிச்சை செய்து கருப்பையை அகற்றி விடுகிறார்கள்.

ப்ரீ மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு

கிராமத்து பெண்கள் கூட மூலிகை அது இது என்று கருப்பை அகற்றும் சிகிச்சையில் இருந்து தப்பித்து விடுகிறார்கள்,. நகர்ப்புற பெண்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை. கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் பக்க விளைவுகள்… உடல் வீங்கி விட்டது என்று வருவார்கள் கருப்பை மண்டல பிரச்சனைகள், பக்க விளைவுகள் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு இந்த பூவரசன் மரப்பட்டை கஷாயம். ப்ரீ மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது இந்த கஷாயம். கருப்பை கட்டி, கருமுட்டை பய் நீர்கட்டிகள் இவற்றுக்கு பூவரசன் பட்டை கஷாயத்தை 100 நாள் பருகிவிட்டு பின்னர் சோதனை செய்தால் கட்டிகள் கரைந்து போயிருக்கும்.

Click to comment

Copyright © 2021