TAMIL

நல்லது நடக்க பூவரசன் பூ பூத்தாச்சு…!

பூவரசன் மரத்தின் பூ, இலை, மரப்பட்டை, காய் எல்லாமே மருந்தாக பயன்படுகிறது.

பூவரசன் மரத்தின் பூ, இலை, மரப்பட்டை, காய் எல்லாமே மருந்தாக பயன்படுகிறது.

மனிதன் உடல் காக்க உறுப்புக்களை காக்க பயன்படுகிறது. இலைச்சாறு உடல்தேற்றியாக பயன்படுகிறது. தோல் பிரச்சனை, வயிறு உப்பிசம், மாந்த கழிச்சல் பிரச்னைக்கு கொடுக்கும் மிகச்சிறந்த மருந்துகளில் பூவரசன் மூலக்கூறு இருக்கும்.இதன் இலைச்சாறு மரப்பட்டையில்  இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய்க்கு மருந்து. விழுதை மேற்புறமாகவும் பூசலாம்., உள்ளுக்கும் கொடுக்கலாம். சாறு . 30 மிலி அளவு எடுத்து காலை, இரவு உணவுக்கு முன்பு சாப்பிடும்போது பயன் கிடைக்கும்.

சோரியாசிஸ் பிரச்சனைக்குத் தீர்வு! இது கொம்பு பூவரசு!

பூ, இலை, மரப்பட்டை, வேர், காய் அனைத்துக்கும் மருத்துவ குணம் உண்டு.தோல் நோய்களை நீக்க மிகச்சிறந்த மருந்து இந்த பூவரசன். தோல் அழுகிப் போகும் தொழு நோயைக் கூட அழிக்கும். ஒருவகை மரத்தின் விதைகளை உடைத்து பார்த்தால் காலியாக இருக்கும். இன்னொரு வகை மரத்தின் விதைகளை உடைத்துப் பார்த்தால்  கொட்டையோடு இருக்கும். இதைத்தான்  கொம்பு பூவரசு என்று சொல்லுவார்கள். இதைத்தான் மருந்துக்கு பயன்படுத்துவார்கள். தலையில் சோரியாஸிஸ், நகங்களில் சோரியாசிஸ், உடலில் கை,  கால்களில்  சோரியாசிஸ், உடல் முழுவதும் சோரியாசிஸ். இதற்கு கொடுக்கும் மருந்துகள் தற்காலிக பலன்களைத்தான் கொடுக்கிறது.  ஆனால், பூவரசு மரத்தின் பொருட்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தடவினால் 3 மாதத்தில்  சரியாகும். இந்த பூவரசு. இலை, பூ, விதை மரப்பட்டை, வேர்ப்பட்டை 100 கிராம் எடுத்து வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி 48 நாட்கள் வெயிலில் வைத்து வைத்து எடுக்க வேண்டும். சத்துக்கள் முழுமையாக எண்ணெயில் சேர்ந்துவிடும். இதை வடிக்கட்டி உடலில் தேய்த்து குளித்தால் தோல் நோய் பிரச்சனை சரியாகும். சோரியாசிஸ் உட்பட.. உடலை சுத்தப்படுத்தி உடலின் கழிவுகளை வெளியேற்றும் இப்படியான வழக்கம் இருந்தால் மாரடைப்பை கூட கட்டுப்படுத்த முடியும்.

மனம் ஆரோக்கியமாக இருக்க…

இலைகளை பறித்து சாறு எடுத்து சாப்பிடுவார்கள். லூஸ் மோஷன் ஆகும்  அடுத்த நாள் சரியாகும். இதை  பூவரசு மரம் பூக்கும் சீசனில் செய்வார்கள். இதனால் உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறி ஆரோக்கியமாக இருக்கும்.மன அழுத்தம் உள்ளவர்கள் இந்த விதை சூரணத்தை சாப்பிட்டு வந்தால் மனம் ஆரோக்கியம் அடையும்.

Click to comment

Copyright © 2021