Skin problems

தோல்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இயற்கை தீர்வு

அரிப்பு பிச்சு எடுக்குதா? இந்த கஷாயம் சாப்பிடுங்க…

அரிப்பு பிச்சு எடுக்குதா? இந்த கஷாயம் சாப்பிடுங்க…

தோலில் அரிப்பு மட்டும் இல்லாமல் அரிப்பு ஏற்படும் இடங்களில் வெண்மையாக, கருப்பாக என்று நிறம் மாற்றம் இருந்தாலே அது கரப்பான் எனப்படும்.

இந்த கரப்பான் இருந்தால் அரிப்பு பிச்சு உதறிடும். ரத்தம் சொட்ட சொட்ட சொரிந்துகொள்கிறவர்கள் உண்டு. கரப்பான்  பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும், கரப்பான் சொறி கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.

கரப்பான் சொறி கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்

நிலவேம்பு சூரணம் 2 கிராம்,  சுக்கு சூரணம் 2 கிராம், காஞ்சோரி சூரணம் 2 கிராம்,  மூக்கிரட்டை சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட பொருட்களை 300 மிலி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி காலை, மதியம், இரவு என்று உணவுக்கு முன்பு குடித்து வாருங்கள்.

புதுத்துணி கூட உடுத்த முடியலையா?

தோல் அரிப்புகள் நிறைய  வகைகள் இருக்கின்றன. ஒத்துக்கொள்ளாத விஷயம் செய்யும் போது தோல் அரிப்பு ஏற்படும். புதிய பொருட்கள் தொடும்போது, தூசி இருக்கும் இடத்துக்கு செல்லும்போது, புதுத் துணி உடுத்தும்போது, வெளியில் போய்விட்டு வந்து உடுத்தி இருக்கும் துணியை மாற்றும்போது, மன அழுத்தம் ஏற்படும்போது என்று இத்தனை வகையில் அரிப்பு உண்டாகும்.இரவு, அதிகாலை என்று அரிப்பு பிச்சு எடுத்துவிடும். முதலில் மெதுவாக ஊற ஆரம்பிக்கும். பின்னர் அரிப்பு அதிகமாகி சீப்பு, கத்தி என்று வைத்து சொரிய ஆரம்பிப்பார்கள். கடைசியில் ரத்தம் சொட்ட சொட்ட சொரிந்து அந்த இடமே ரத்தம் வடிய ஆரம்பித்துவிடும். அப்படிப்பட்டவர்கள்  இந்த கரப்பான் சொறி கஷாயத்தை 6 மாத காலம் சாப்பிட்டு பாருங்கள். அரிப்பு மட்டும் அல்ல கரப்பானும் மறைந்தே போகும்.

தோழில் கூட செய்ய முடியாது…

65 வயது தொழிலதிபர் ஒருவர் தொழிலை விட்டு விலக ஆரம்பித்து இருக்கிறார். வீட்டில் அனைவரும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க, அவரது மகன் அவரை என்னிடம் அழைத்து வந்தார். தொழிலை விட்டு விலக என்ன காரணம் என்று கேட்டபோது, கால் பாதம் முதல் முழங்கால் வரை அரிப்பு  பிச்சு எடுக்குது சார். கத்தி, சீப்பு என்று வைத்து சொரிந்துகொள்கிறேன். நான் எப்படி தொழிலில் கவனம் செலுத்த முடியும் என்று கூறினார். அவருக்கு நவீன மருத்துவத்தில் ஸ்டீராய்டு முதற்கொண்டு கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை என்று கூறினார்.உடனே இந்த கரப்பான் சொறி கஷாயத்தைத்தான் மூன்று வேளையும் வைத்து சாப்பிட்டு வாருங்கள் என்று பரிந்துரை செய்தேன். மூன்று வாரத்திற்கு பிறகு  வந்தபோது அரிப்பு ஒரு மணி நேரமாக குறைந்து இருக்கிறது என்று கூறினார். பின்னர் மூன்று மாதத்தில் வந்தபோது அரிப்பு  இல்லை சார் என்று கூறினார். அடுத்து 6 மாத காலத்தில் கரப்பான் இருந்த இடம் தெரியவில்லை. புதிய திசுக்கள் வளர ஆரம்பித்து தோலின் நிறம் முன்பு போல ஆகி இருந்தது. முதலில் கரைப்பானின் அரிப்பை நிறுத்தும். தொடர்ந்து கரப்பான் சொறி கஷாயத்தை சாப்பிட்டு வரும்போது கரப்பான் குணமாகி விடும்.

Click to comment

Copyright © 2021