TAMIL

தண்ணீர் குடிச்சாலும் மோஷன் போகணும்னு தோணுதா? வில்வ இலை கஷாயம் சாப்பிடுங்க…!

வில்வ இலை கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

வில்வ இலை கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி சூரணம் 3 கிராம், வில்வ இலை சூரணம் 3 கிராம், கோரைக்கிழங்கு சூரணம் 3 கிராம்,  குருந்தொட்டி வேர் சூரணம் 3 கிராம், சுக்கு சூரணம் 3 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

எது சாப்பிட்டாலும் மலம் கழிக்க வேண்டும் போல…

இரிட்டபுள் பவல் சின்ரோம் என்கிற எது சாப்பிட்டாலும் உடனே மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கஷாயம் ஒரு  வரப்பிரசாதம் என்று சொல்லலாம். வயிற்றில் பசியின்மை, செரிமானமின்மை, ஜீரணமின்மை .போன்றவற்றைத் தீர்க்கும். நேரா நேரத்தில் சாப்பிட முடியாது. எப்போதும்  வயிறு நிரம்பி இருப்பது போல இருக்கும். காலையில் சாப்பிட்ட இட்லி அப்படியே வயிற்றில் இருக்கும். மலம் கழித்தால்தான் பசி எடுப்பது போல இருக்கும். இதை நீக்கும் அருமருந்து இந்த கஷாயம். ,பசியின்மை ஜீரணமின்மை தீர்ந்து போகும். இந்த கஷாயத்தைத் தொடர்ந்து  100 நாட்கள் சாப்பிட்டு வர அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வுக்கு குணம் தெரியும். ஒரு நாளைக்கு 8 முறை மலம் கழிக்கும் பழக்கம் என்பது படிப்படியாக குறைந்து வரும்.

பெருங்குடலுக்கு நல்லது செய்யும் பாக்டீரியா…

சாப்பிட்ட உணவு அப்படியே வருவது போல இருக்கும் நிலை   மாறும்.சில சமயம்  உடலுக்கு நல்லது செய்யும் பாக்டீரியா அளவு குறைந்து போகும். இதை சரி செய்ய இந்த கஷாயம் நல்ல  மருந்து. நல்ல பாக்டீரியாவின் அளவு அதிகமாகி பிரச்சனை முழுசா  குணமாகும். அல்சரேட்டிவ் கொலாய்டிஸ் என்கிற பெருங்குடல் அழுத்தம் பிரச்சனை சரியாகும்.e 

Click to comment

Copyright © 2021