TAMIL

கோடை காலத்துக்கு ஏற்ற சிறுநீரக கல் கஷாயம் பருகிப் பாருங்க!

கோடைக்காலம் வந்துவிட்டாலே வயிறு உபாதை.

கோடைக்காலம் வந்துவிட்டாலே வயிறு உபாதை.

சிறுநீரக மண்டல உபாதை, சிறுநீரக கற்கள் என்று பிரச்சனைகள் வரும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் என்று அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான  சிறுநீரக கல் கஷாயம்.பற்றி இப்போது பார்க்கலாம்.

சிறுநீரக கல் கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

லவங்க பட்டை சூரணம் 2 கிராம்,  சுக்கு சூரணம் 2 கிராம்,  ஏலரிசி சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, 100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கருப்பட்டி சேர்த்து காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி சேர்க்க கூடாது.

நறுமணம்…நல்ல குணம் தேநீர் மாத்திரை  பருகலாம்!

இது காரத்தன்மை இருக்கும் கஷாயம். . வாசனை மிக நன்றாக இருக்கும். சிறுநீரக கற்களை நீக்கும் மிகச்சிறந்த மருந்து. சிறுநீரக கற்கள் அடிக்கடி ஏற்பட்டு உடலுக்கு உபாதை ஏற்படுத்தும். ஒவ்வொரு கோடைக்காலத்திற்கும் சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை. செய்து எடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.  இதை குணப்படுத்த வேண்டும். இதிலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும். அதற்கு இந்த  சிறுநீரக கஷாயம் அருமருந்து.

சிறுநீரகத் தொற்றா?

அடிக்கடி சிறுநீரக தோற்று பெண்களுக்கு மற்றும் வயதான ஆண்களுக்கு ஏற்படுவதை பார்க்கிறோம். சில நேரங்களில் சிறுநீர் கழித்த பிறகும் நடுக்கமும் வேதனையும் இருக்கும். அந்த வகையில் அடிக்கடி ஏற்படும் சிறுநீரகத் தொற்றை மாற்றும் அருமருந்து இது. 100 நாட்கள் தொடர்ந்து பருகி வரும்போது எரிச்சல், வலி, வேதனை இல்லாமல் உடல் அமைதியாக மாறிவிடும். சிறுநீரக தொற்று மறைந்துவிடும்.

பெண்களே…உங்களுக்காக!

பெண்களுக்கு தும்மும்போதும்,. இருமும்போதும் சிறுநீர் கசிந்து விடுகிறது என்கிற கவலை இருக்கும். கோயிலுக்கு கூட போக முடியவில்லை கீழே அமர்ந்து எழுந்தால்  சிறுநீர் கசிந்து விடுகிறது என்பார்கள்.  இதற்கு அருமருந்து இந்த சிறுநீரக கல் கஷாயம். வயிற்று பொருமல் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை சாப்பிடுவதற்கு செய்யும் முயற்சிகள் கூட பலனளிக்காமல் இருக்கும். காலை உண்ட உணவு இரவு வரை செரிக்காமல் இருக்கும் இந்த கோடை  காலத்தில் வயிற்று பொருமலை நீக்கும் அருமருந்து. குழந்தைகளுக்கு கூட சிட்டிகை அளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீர் கொடுத்து விட்டால் கழிசல் நிற்கும்.

சீதபேதி பிரச்சனத் தீரும்! காலை மலம் நார்மல் நிறத்தில் இருக்கிறது. பின்னர்  சீத பேதியாகி  பழுப்பு கலந்து கருப்பு நிறத்தில் போகிறது.இதை குணப்படுத்த முடியவில்லை என்பார்கள். . இதற்கு இந்த சூரணம் மிக நல்லது.சிறுநீர் பையில் மாற்றம், சிறுநீர் கசிந்து விடுவது. சிறுநீரக கற்கள், எல்லாவற்றுக்கும் மிகச்சிறந்த மருந்து.

Click to comment

Copyright © 2021