TAMIL

குழந்தைகளின் அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு முழு வல்லாரை மூலிகை!

வல்லாரையில் வல்லாரை, நீர் வல்லாரை என்று பலவகைகள் இருக்கின்றன.

வல்லாரையில் வல்லாரை, நீர் வல்லாரை என்று பலவகைகள் இருக்கின்றன.

அதில் ஒன்றான முழு வல்லாரை மூலிகை பற்றி இப்போது பார்க்கலாம்.முழு வல்லாரை வட்ட வடிவமான இலை அமைப்பு,  காம்பு நடுவில் இருக்க காம்பை சுற்றி வட்டவடிமாக இருக்கும் இந்த வல்லாரை இலை. மூளையில் புதிய செல்களின் அளவுகள் அதிகமாகவும், மூளைத் தேய்மானம் சரியாகவும், குழந்தைகள் ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவிட்டி, புரிதல் தொடர்பான பிரச்சனைகள் சரியாகவும்  முழு வல்லாரை மருந்தாக  பயன்படுகிறது. இதன் இலைச்சாறு, அல்லது இதனை அரைத்த விழுது, அல்லது பதப்படுத்தி எடுக்கப்பட்ட நெய் மூன்றுமே நல்ல மருத்துவ குணங்களை உடையது. வெரிகோஸ் வெயின் போன்ற பிரச்சனைகளுக்கும் உள்ளுக்கோ  அல்லது வெளிப்புறப் பூச்சுக்கோ முழு வல்லாரை பயன்படுகிறது.

மூளைத் தேய்மானம்… மூளை நடுக்கம்…

மூளைத்  தேய்மானம், மூளை நடுக்கம், மறதி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்து என்று முழு வல்லாரையை சொல்லலாம். இதனை பதப்படுத்தி எடுக்கப்பட்ட நெய், சாறு, விழுது என்று எதாவது ஒரு விதத்தில் முழு வல்லாரையை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்,   பார்கின்சன் என்று சொல்லக்கூடிய மூளை  நடுக்க நோய்க்கு முழு வல்லாரையிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகள் மருந்தாக பயன்பாட்டில் இருக்கிறது. மறதி, பேசுவதில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் என்று மூளை சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்தாக இருக்கிறது    

பக்கவாதம் வந்த பின்னான பக்க விளைவுகள்…

உடலை உரமாக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முழு வல்லாரையை சாறாகவோ, அல்லது அரைத்த விழுதாகவோ, இல்லை பதப்படுத்தி எடுக்கப்பட்ட நெய்யாகவோ பயன்படுத்தலாம். பக்கவாதம் வந்து ஆபரேஷன் செய்தும் கால் கை  இயக்கம் சீராக இல்லை, விரல்கள் நன்கு வேலை செய்யவில்லை, பக்கவாதம் வந்த பின்னான பக்க விளைவுகள் சரியாகவில்லை என்று வருகிறவர்களுக்கு இந்த முழு வல்லாரையின் பதப்படுத்தப்பட்ட நெய் நல்ல இயற்கை மருந்து.ஆட்டிசம், மூளைத் தேய்மானம்,மறதி போன்ற நோய்களுக்கு அருமருந்து முழு வல்லாரை. எனினும் தகுந்த மருத்துவர் ஆலோசனை இன்றி இதை மருந்தாக சாப்பிடுவது தவறு.

Click to comment

Copyright © 2021