TAMIL

கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க குழந்தைப் பேறு தரும் சூரணம் !

குழந்தையின்மை… மாதவிலக்கு கோளாறுகளுக்கு முழுமையான மருத்துவ தீர்வு தரும் அரசமரம்!

குழந்தையின்மை… மாதவிலக்கு கோளாறுகளுக்கு  முழுமையான மருத்துவ தீர்வு தரும் அரசமரம்!

மரத்தின் அரசன் என்று அரசமரத்தை சொல்லுவார்கள்.

நீண்டகாலம் வாழக்கூடிய பெரும் மர வகையில் அரசமரமும் ஒன்று. அரச மரத்தின் வேர், மரப்பட்டை, இலை, பழத்தின் விதை என்று அனைத்தும் மருத்துவத்துக்கு உகந்தது. குழந்தையின்மை மாதவிலக்கு கோளாறுகளுக்கு  முழுமையான மருத்துவ தீர்வு தருகிறது அரசமரம்.

தெருவுக்கு தெரு செயற்கை கருவூட்டல் மையம்….!

இளைய தலைமுறைக்கு செயற்கை முறை கருவூட்டல் மையம் இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு இருக்கிறது. அன்றைய காலத்தில்  கருப்பை பிரச்சனை, குழந்தையின்மை பிரச்சனைகளை  எவ்வாறு தீர்த்து கொண்டார்கள் என்று பார்த்தால் அதற்கு காரணம் இந்த அரசமரம்தான். அரசமரம் வளர்சிதை  மாற்றம்  குறையாமல் காத்து,  புற்றுநோய் வராமல் கூட தடுக்கும் சிறப்பு வாய்ந்தது. அரசமரம் இருக்கும் இடங்களில் ஆக்சிஜன் அதிகம் இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

குழந்தையினமை பிரச்னைக்கு பால் கஷாயம்!

அரசமரத்தின் மரப்பட்டை பால் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் குழந்தையின்மை பிரச்சனைகள் தீரும். கருக்குழல் அடைப்புக்கு அரசமரத்தின் பட்டை பால் கஷாயம் சிறந்த மருந்து. அதாவது மரப்பட்டையை 200 மிலி பால், 100 மிலி தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து 200 மிலியாக வற்றியவுடன் வடிக்கட்டி பருக வேண்டும். இதுதான் அரசமரத்தின் பட்டை பால் கஷாயம். அரச மரத்தின் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து மருந்தாக சாப்பிடலாம். இலைச்சாறு எடுத்து 100 நாட்கள் காலை இரவு என்று பருகி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கான கால் எரிச்சல், நரம்பு பலஹீனம் சரியாகும். குழந்தைப் பேறு இயற்கை முறையில் கிடைக்கும்.

மரங்களில் நான் அரசு …. கிருஷ்ண பரமாத்மா!

அரசமரம் பற்றிய குறிப்புக்கள் இதிகாசம் புராணங்களில் இருக்கிறது. பகவத் கீதையில்  மரங்களில் நான் அரசு என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார். புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்று சொல்கிறோம். அந்த போதி மரம் அரசமரம்தான். அரசமரத்தின் பிறப்பிடம் இந்தியாதான். அரச மரத்தை சுற்றினாள் அடிவயிற்றை தடவினாள் என்கிற பழமொழி கூட இருக்கிறது.  

Click to comment

Copyright © 2021