TAMIL

இளமையாக வாழ வைக்கும் ஓரிதழ் தாமரை!

சித்த மருத்துவ முறையில் மட்டும் இல்லை மாடர்ன் மெடிஷனிலும் ஓரிதழ் தாமரை மூலக்கூறுகள் உண்டு.

சித்த மருத்துவ முறையில் மட்டும் இல்லை மாடர்ன் மெடிஷனிலும்  ஓரிதழ் தாமரை மூலக்கூறுகள் உண்டு.

இளமையாக  ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்யும் ஓரிதழ் தாமரை. இதை பச்சையாக உபயோகப்படுத்தினால் நல்லது. உலர்ந்த நிலையிலும் பயன்படுத்தலாம். 30 மிலி சாறு எடுத்து காலை, இரவு உணவுக்கு முன்பு அல்லது விழுதாக செய்து மூன்று மண்டலம் அதாவது மூன்று 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான ஹார்மோன் அளவில் முன்னேற்றம் ஏற்படும்.

வேட்டை முற்றினால் கட்டை….

மேகவெட்டை நோய் வெட்டை முற்றினால் கட்டை என்று சொல்லுவார்கள். சிறுநீர் கழிப்பதற்கு முன்பு வெண்மை திரவம் வெளியேறுவது அல்லது சிறுநீருடன் விந்து வெளியேறுவது இது பிரச்சனை இல்லை கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாலும் கூட பாதிப்பு பெரிதாக இருக்கும். இதை குணப்படுத்தும் மிகப்பெரிய மருந்து இந்த ஓரிதழ் தாமரை.சாறு 30 மிலி அல்லது விழுது கொட்டைப்பாக்கு அளவு எடுத்து  காலை வெறும் வயிற்றில் மூன்று மண்டலம் சாப்பிடும்போது சரியாகும்.

ஆண்களின் தவறான பழக்க வழக்கம்…

ஆண்கள் தவறான பழக்கம் இருப்பதால் அமைதி தன்மையை இழந்து விடுகிறார்கள். விந்து முந்துதல் போன்ற பிரச்சனைகள்… இது போல பிரச்சனைகளை குறைத்து உடலை உரமாக்கும் இந்த ஓரிதழ் தாமரை..வெறும் இனப்பெருக்க மண்டல பிரச்னைக்கு மட்டும் இல்லாமல் உடலில் காயங்கள்… வெரிகோஸ் அல்சர், சர்க்கரை நோய் புண்கள்… பிளாஸ்டிக் சார்ஜரி  செய்தாலும் தீர்வு இருக்காது. ஆனால், இயற்கை முறையில் ஓரிதழ் தாமரை  குணமாக்கும். இலை, பூக்களை மட்டும் அரைத்து காயம் இருக்கும் இடங்களில் பத்து போல் போட்டுவிட்டு பிறகு காலையில் குளிக்க வேண்டும்.

உடல் அரிப்பு குறையும்…

இலைகளை அரைத்து உடலில் வறட்சி இருக்கும் இடங்களில் பூசி குளித்தால் அரிப்பு காரணிகள் குறையும். சிறுநீரகம் செயல் இழந்து போகும்போது வயிற்றின் அடிப்பகுதியில் வலி இருக்கும். இதை பத்து போல் போட்டு அரை மணி கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும். தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஓரிதழ் தாமரையை பயன்படுத்த கூடாது..

Click to comment

Copyright © 2021