Ayurveda

இந்த ஒரு காய் போதும் உடலின் எல்லா ராஜ உறுப்புகளையும் ஆரோக்கியமாக்க!

கோடைக்காலத்தில் சரும வறட்சியா? இதோ இருக்கிதே வெள்ளரிக்காய்!

கோடைக்காலத்தில் சரும வறட்சியா? இதோ இருக்கிதே வெள்ளரிக்காய்!

முகப்பரு…தோலில் கருமை நிறம்….!

உணவுக்காகவும், அழகு சாதன  பொருட்கள் தயாரிக்கவும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்  தாவரமாக  வெள்ளரி செடி  இருக்கிறது.வெள்ளரி இதன் காய்  மட்டும் இல்லை, இலை, பூ, வேர் அனைத்தும் மருந்தாக  பயன்படுகிறது. வெள்ளரிக்காயை அப்படியே கடிச்சு சாப்பிடலாம். விதையை எடுத்துவிட்டு சதையை மட்டும் அரைத்து உள்புறம் மருந்தாக சாப்பிடலாம்.  மிகப்பெரிய அளவில் முகப்பருக்கள் வந்துவிட்டது….தோலில் கருமை நிற மாற்றங்கள் வயிறு பிரச்சனை, மாதவிலக்கு வராமல் இருக்கும் பிரச்சனை, கருமுட்டை கட்டிகளால் மாதவிலக்கு இல்லை…இது போன்ற பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய் அருமருந்தாக இருக்கிறது. வெள்ளரி செடியின் கொடி இலையை  அரைத்து எடுத்த விழுது ஒரு கொட்டைப்பாக்கு அளவு, அல்லது சாறு 30 மிலி அளவு எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.

ஆண்களின் உயிரணுக்கள் பிரச்சனைக்குத் தீர்வு!

அடிவயிற்று வலி, மாதவிலக்கு வயிற்று வலி, தலைமுடி பிரச்சனைகள், வெள்ளை படுதல் பிரச்சனைக்குத் தீர்வு வெள்ளரிகாய், கொடி இலை.  ஆண்களுக்கு இனப்பெருக்க மண்டல உயிரணுக்கள் பிரச்னைக்கு உபயோகப்படுத்தும் மருந்தாக வெள்ளரிக்காய் இருக்கிறது. கிரேக்க ரோமானியர்கள் வெள்ளரிக்காயை அழகுக்கும் உபயோகப்படுத்தி இருப்பதாக குறிப்புக்கள் இருக்கின்றன. பொதுவாக தோலுக்கு  வறட்டுத் தன்மையை நீக்கி பொலிவைக் கொடுக்கும் காரணியாக வெள்ளரிக்காய் இருக்கிறது. வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் மட்டும் இன்றி உடலெங்கும் பூசி விட்டு அரை மணி கழித்து வெந்நீரில் குளிக்க கோடைக்காலத்தில் சரும வறட்சி இல்லாமல் சருமம் பொலிவுடன் இருக்கும். உடலில் அரிப்பு இருந்தால் வெள்ளரிக்காயை அரைத்து அரிப்பு உள்ள இடங்களில் பூசி ஊறவைத்து வெந்நீரில் குளித்து விட  வேண்டும். தொடர்ந்து செய்து வர அரிப்பு நின்றுபோகும்.

பித்தப்பை கற்களுக்குத் தீர்வு!

பித்தப்பை கற்கள் இருந்தால் வெள்ளரிக்காயை எடுத்து விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும்  20 கிராம் எடுத்து 200 மிலி தண்ணீரில் ஜூஸ் போல செய்து பருகி வர வேண்டும். இவ்வாறு 100 நாட்கள் செய்து வர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்ட பித்தப்பை கற்கள் கூட 50 சதவிகிதம் கரைந்தே போயிருக்கும். பின்னர் தொடர்ந்து சாப்பிட்டு வர முற்றிலுமாக பித்தப்பை கற்கள் கரைந்து போகும்.  வெள்ளரி கொடி வேர் சோரியாசிஸ் நோய்க்கு அரு மருந்து என்று சொல்லலாம். கொடியின் வேர் 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 300 மிலியாக குறைத்து , காலை மதியம் இரவு என்று பருகி வர சோரியாசிஸ் நோயின் அரிப்புக்கள் குறைந்து மாற்றம் ஏற்படும்,

அடடா…மஞ்சள் காமாலை வந்துடுச்சே….

மஞ்சள் காமாலைநோய்… பசியின்மை, எரிச்சலோடு  மஞ்சள் நிறமாக சிறுநீர் கழிவது போன்ற பிரச்சனைக்கு மிகப்பெரிய மருந்து வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயின் தசைப்பற்று மட்டும் எடுத்து 100 மிலி மோரில் கலந்து காலை மதியம் என்று பருகி வர மஞ்சள் காமாலை, எரிச்சலுடன் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை சரியாகும். நிறைய பேருக்கு கோடைக்காலத்தில் தலையில் கட்டி இருக்கும்.அடுத்து பக்கத்தில் பக்கத்தில் என்று புதிது புதிதாக கட்டிகள் வந்துக்கொண்டே இருக்கும். இதற்கு வெள்ளரிக்காயை அரைத்து வாரத்துக்கு ஒருமுறை என்று தலையில் பேஸ்ட் போல போட்டு குளித்து வந்தால் கட்டிகள் வராமல் இருக்கும்.

Click to comment

Copyright © 2021