நுனா மரத்தின் மரப்பட்டை, இலை, , பழங்கள் எல்லாமே மருந்தாக பயன்படுகிறது. காய்களை பதப்படுத்தி தயாரிக்கும் சாறு உணவாகப் பயன்படுகிறது.
நுணாவின் பழம் மற்றும் காயிலிருந்து பதப்படுத்தி எடுக்கப்படும் சாறுதான் நோனி என்கிற டானிக்காக சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இலையை அரைத்து எடுக்கும் விழுது கொட்டைப்பாக்கு அளவு பயன்படுத்தலாம், சாறு மருந்துக்கு 30 மிலி அளவு பயன்படுத்தலாம். நுணா பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருக்கும்.
உடல் குறையும்…
உடலளவில் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். உடல் எடையை குறைப்பது, ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, மாதவிலக்கு கோளாறுகளை நீக்குவது என்று பல வகைகளில் நுணா ஆரோக்கியத்தை பேணுகிறது
புற்று நோய்க்கு சிறந்த மருந்து…
அறிவியல் பூர்வமாக நுணா பழங்கள் புற்று நோய்க்கு அருமருந்தாக கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருக்கிறது.புற்று நோயில் வலி உண்டாக்கும் செல்களை உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளை நுணா பழம் குறைப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.புற்று நோய் வராமல் தடுப்பதற்கு, உள்ளுறுப்புக்கள் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு நுனா சிறந்த மருந்தாக இருக்கிறது. மாதவிலக்கு சரியாக வரவில்லை என்று மருத்துவர்கள் கருத்தடை மாத்திரையாகிய செயற்கை ஹார்மோன் மாத்திரையை எழுதிக்கொடுக்கிறார்கள். இதனால், இயற்கை முறை கருத்தரிப்பு என்பது இல்லாமல் போகிறது. அதாவது கருமுட்டைகள் இல்லாத மாதவிலக்கு ஆகி. நாளடைவில் கருமுட்டை உற்பத்தி இல்லாமலே போய்விடுகிறது. இதனால் இயற்கை முறை கருத்தரிப்பு என்பதும் இல்லாமல் போய்விடுகிறது. .இதற்கு நுணா பழத்தின் சாறு 30 மிலி எடுத்து 200 மிலி தண்ணீரில் கலக்கி குடித்து வர மாதவிலக்கு சீராகும். இயற்கை முறை கருத்தரிப்புக்கு உ ண்டாகும். உடல் எடை குறையம்.. தொப்பை குறையும். பிட்டப்பகுதி பெருத்து இருத்தல், மார்பகம் சரிந்து இருத்தல் எனபதும் சரியாகும்.
நடக்க முடியவில்லையே…. 80 வயது முதியவர் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கால் மூட்டுக்கள் சரியாக இருந்தாலும் நரம்பு வேலை செய்யாமல் நடக்க முடியவில்லை என்று வந்தார். அவருக்கு நுணா மரத்தின் சாறு குடிக்க சொல்லி சொல்லிக்கொடுத்து அனுப்பினேன். அவர் முதல் ஒரு மாதம் கழித்து வரும்போது கால்களில் உணர்ச்சி இருக்கிறது. வாக்கர் இல்லாமல் ஸ்டிக் வைத்து நடக்க முடிகிறது என்று சொன்னார். அடுத்த ஒரு மாதத்தில் நன்றாக நடந்து வந்தார். என்னதான் நுனா மரம் மருத்துவ பயன் பாட்டில் இருந்தாலும் தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தாக எடுத்துக்கொள்வது தவறு.