Kidney

இதய நோய்கள் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை குணமாக்கும் அதிசய மூலிகை!

உடலை இளமையாக ஆரோக்கியமாக வைத்து இருக்கும் செம்பருத்தி

உடலை இளமையாக ஆரோக்கியமாக வைத்து இருக்கும் செம்பருத்தி

மாதவிலக்கு வலி போக்கும் செம்பருத்தி!

இலைகள், பூக்கள் என்று இரண்டுமே மருந்துக்கு பயன்படும். ஒற்றை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி இவைகளில் சிவப்பு நிறம்தான் ரொம்ப பிரசித்தி. கேரளா, கர்நாடகாவில் வெள்ளை நிற செம்பருத்தியும் உண்டு. என்றாலும் எல்லாமே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாவர  வகைதான். செம்பருத்தியின் இலை, பூக்களை சிகைக்காயோடு சேர்த்து அரைத்து தலைக்கு குளிக்கும் வழக்கம் பெண்களிடம் இருக்கிறது. செம்பருத்தி இலை, பூக்களின் விழுது காலை இரவு உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால், மாதவிலக்கு வலி, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் உண்டாகும் கடுமையான வலி கூட நின்று போகும்.

சீன ஆய்வு சொல்வது என்ன?

சீனாவில் இருக்கும் ஒரு  ஆராய்ச்சி பல்கலை கழகத்தில் செம்பருத்தியின் மொட்டுக்களில் இருக்கும் ஒரு வேதியியல் பொருள் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய்க்கு மருந்தாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், மார்பகப் புற்று நோய்க்கு  தடுப்பு ஊசியாக பயன்படுத்தலாமா என்கிற ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது.

உடலை இளமையாக ஆரோக்கியமாக வைத்து இருக்கும் செம்பருத்தி

உடலை இளமையாக ஆரோக்கியமாக வைத்து இருக்க செம்பருத்தி பூ  மொட்டை மென்று சாப்பிடும் வழக்கம் உள்ளது.  வட மாநிலங்களில் செம்பருத்தி மொட்டை சர்க்கரையோடு கலந்து சாப்பிட கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.  10 பூக்கள் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 100 மிலி வடிக்கட்டி தேநீர் போல பணம் கற்கண்டு சேர்த்து காலை இரவு  6 மாத  காலம் கொடுத்து வந்தால், பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு கோளாறுகள் இல்லாமல் போகும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் பிரச்சனை, பெண்களின் உடல் அமைப்பையே மாற்றி விடும். முகம் பொலிவிழந்து, மன ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டு, எப்போதும் கோபம் எரிச்சல் என்று இருப்பார்கள். அவர்களுக்கு செம்பருத்தி பூக்களை  அரைத்து விழுதாக 100 நாட்கள் சாப்பிட கொடுக்க   வெள்ளைப்படுதல் பிரச்சனை மனரீதியான பாதிப்புக்கள் இரண்டுமே காணாமல் போகும்.

Click to comment

Copyright © 2021