பொதுவாக மூன்று விதமான ஆஸ்துமா பிரச்சனை இருக்கும். நெஞ்சுக்குள் நிறைய சளி, ஆஸ்துமாவினால், குத்தி குத்தி வரும் இருமல், பசியின்மை பிரச்சனை மூன்றுமே ஆஸ்துமா பிரச்சையால்தான். கபமும் கழிவும் நுரையீரலை விட்டு வெளியேறும்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு அருமருந்தாக இருக்கும் ஓமம் கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இது 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி காலை இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.
ஆஸ்துமா நோயை நிரந்தரமாக நீக்க முடியுமா
ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் கேள்வி என்ன என்றால், ஆஸ்துமா நோயை நிரந்தரமாக நீக்க முடியுமா என்பதுதான். அதோடு,. நுரையீரல் நோய்களை நிரந்தரமாக நீக்க முடியுமா? இப்போது நம்மைச் சுற்றி எல்லாமே மாசு அடைந்ததாக இருக்கிறது. சுவாசிக்கும் காற்று, உணவு நீர் என்று எல்லாமே மாசு அடைந்ததாக இருக்கிறது. இயற்கையாக உண்ணும் பொருட்களை மருந்தாக உணவாக சாப்பிடும் வழக்கம் இருந்தால் நோயின் தாக்கம் இருக்காது. அது போல உடலை ஆரோக்கியப்படுத்தும் இந்த ஓமம் கஷாயம். நுரையீரல் மண்டல அழற்சி அனைத்தும் படிப்படியாக குணமாகிவிடும்.
தலைக்கு குளித்தால் அடுக்குத் தும்மல் வருதா?
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல், தும்மல் காய்ச்சல் சரியாகிவிடும். தலைக்கு குளித்தவுடன் ஆடு தும்முவது போல தும்ம வேண்டி இருக்கிறது….இரவு காய்ச்சலுடன் கூடிய சளி என்று படுத்தி வைக்கிறது என்று சொல்லுவார்கள். இந்த பிரச்னையை நீக்கும் அருமருந்து. இந்த ஓமம் கஷாயம். அடுக்குத் தும்மல் பிரச்சனைகள் கூட குறைந்துவிடும்.
குழந்தைகளுக்கும் தூக்கமின்மை பிரச்சனை…
இன்றைக்கு குழந்தைகள் கூட தூக்கமின்மை நோயினால் அவதி படுகிறார்கள். 12 அல்லது 1 மணி வரை தூங்குவதில்லை. என்று சொல்வார்கள். பயிற்சி கொடுத்தாலும் கூட தூக்கமின்மைதான். இதனால், கோபம், பிடிவாதம், முரட்டு குணம் இதற்கு உதவி செய்யும் இந்த ஓமம் கஷாயம். இதை சாப்பிடுவதனால் .தூக்கமின்மை பிரச்சனை குறைந்து போகும். சில குழந்தைகளுக்கு பிடிவாதம் பயங்கரமாக இருக்கும். இது வேணும் என்றால் வேணும், வேலை செய்ய மாட்டோம் என்றால் மாட்டோம் இன்றைக்கு குழந்தைகளுக்கு இதுதான் பிரச்சனை.போன், கம்ப்யூட்டர் இதை தவிர்க்க சொன்னால் கோபம் வருகிறது. அதற்கும் இது தீர்வு தரும் ஓமம் கஷாயம்.மன இறுக்கம் சார்ந்த பிரச்சனைகளை கூட நீக்கி விடும்.