TAMIL

அத்திமரப்பட்டை கஷாயம்

பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள்.

பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள்.

அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் தள்ளிப் போகுதல், வெள்ளைப்படுதல், கருமுட்டைப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்…. இதற்குத் தீர்வு தரும் இயற்கை வைத்தியம். அத்திமரப்பட்டை கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.

அத்திமரப்பட்டை கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

கீழாநெல்லி சூரணம் 2 கிராம்,  அத்திமரப்பட்டை சூரணம் 2 கிராம்,  அசோக மரப்பட்டை சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

மருத்துவ குணங்கள்:

அத்திமரப்பட்டை கஷாயம் பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிடும்.மாதவிடாய் காலத்தில்  உதிரப்போக்கு சரியாக இருக்கவில்லை என்கிற கவலை  இருந்தாலும், அதை  சரி செய்துவிடும். பெண்மைத் தன்மையை பலப்படுத்தும் ஒரு கஷாயம் இந்த அத்திமரப்பட்டை கஷாயம். இன்றைக்கு பெண்களுக்கு ஏற்படும்  மாதவிலக்கு கோளாறுகளுக்கு சிறந்தது. கருப்பையில் ஏற்படும் நார்கட்டிகள். அதிக உதிரப்போக்கை ஏற்படுத்தும், சில நேரங்களில் தேவையற்ற உதிரப்போக்கு இருக்கும்.இதற்கு அத்திமரப்பட்டை கஷாயம் மிகச்சிறந்த மருந்து.கருப்பை கட்டிகள் தொந்திரவு தருகிறது என்று கருப்பையை  அறுவை சிகிச்சை செய்து நீக்கி விடுவோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும், மூட்டு வலி இருக்கும்.தேவையற்ற இடங்களில் முடிகள் வளரும்… பின்னாட்களில் மார்பக கட்டிகள் கூட உண்டாகும்.இப்படிப்பட்ட . பக்க விளைவுகள் இல்லாமல் இருக்க இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளும்போது சரியாகும். மாதவிலக்கு கோளாறுகளில் ஏற்படும் பாதிப்பு, கருமுட்டைப்பை நீர்க்கட்டிகள் முதல் குழந்தை சீக்கிரம் உண்டாக்கிவிடும்.  இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்தால் கால தாமதம் அல்லது இல்லாமலே போகும். கருமுட்டைப்பை நீர்க்கட்டிகள் பிரச்சனையை இந்த கஷாயம் குறைக்கும். வெள்ளைப்படுதல் கோளாறு இளம்  பெண்கள் முதல்  வயதானவர் வரை என்று வாட்டி எடுக்கும். இவர்களுக்கு உணவில் நாட்டமில்லாமல் இருக்கும். உடலில் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பது, படிப்பில் கவனம் இல்லாமல் இருப்பது, உடலில் வலி…. எப்போதும் எரிச்சலான  மன நிலையில் இருப்பது, எதற்கெடுத்தாலும்  உடைந்து அழுவது என்று இருப்பார்கள். இந்த சிம்டம்ஸ். இருந்தால் இதை குறைக்கும் மருந்து இந்த அத்திமரப்பட்டை கஷாயம். வெள்ளைப்படுதல் கோளாறுகள் அதிகமானால் பிறப்புறுப்பில் அரிப்பு புண்கள் கூட உண்டாகும். மெனோபாஸ் ஆனபிறகு உடல் எடை அதிகமாகும், பிட்டப்பகுதி, கால்கள், அடிவயிறு என்று சதை பற்று உண்டாகும்.மார்பகம் பெரிதாகும். போஸ்ட் மெனோபாஸ் பாதிப்பை ஏற்படுத்தும். போஸ்ட் மெனோபாஸ் போது இந்த பிரச்னையை குறைக்கும் அத்திமரப்பட்டை  கஷாயம்.

Click to comment

Copyright © 2021