TAMIL

அட..கொழுப்பை கரைத்து எடையைக் குறைக்கும் வெண்பூசணி!

நமது நாட்டில் மட்டுமல்ல தெற்காசியாவில் அமாவாசை அன்று பூசணிக்காயை உடைக்கும் வழக்கம் இருக்கிறது

நமது நாட்டில்  மட்டுமல்ல தெற்காசியாவில் அமாவாசை அன்று பூசணிக்காயை உடைக்கும் வழக்கம் இருக்கிறது.

இப்படி பூசணிக்காய் நமது கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு மூலிகையாக இருக்கிறது.பூசணிக்காயின் வெள்ளை சதைப்பற்று மட்டுமே நாம் பயன்படுத்தக் கூடிய ஒன்று.. விதைகளை பயன்படுத்துவதில்லை. இந்த வெண் பூசணியின் சாறு எடுத்து அதை நேரடியாகவே மருந்தாக பயன்படுத்தலாம்.வேகமாக சென்று  நமது உடலில் வேலை செய்யக்கூடிய அற்புத மூலிகை வெண் பூசணிக்காய். இதன் கொடி, இலை, தண்டு, வேர், பூசணிப் பூ அனைத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பூசணி விதையில் இருக்கும்  அல்கலாய்ட்ஸ் கொழுப்பை கரைக்கவும்,  எடையை குறைக்கவும்  ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  

பெண்களுக்கு வெள்ளைப் படுகிறது…முகம் பொலிவிழக்கிறதா?

வெண்பூசணி உடலின்  தேவையற்ற சூட்டை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சூட்டினால் உண்டாகும் பாதிப்புக்கள்  உதாரணத்துக்கு பெண்களுக்கு உண்டாகும்  வெள்ளைப் படுதல் கோளாறை சொல்லலாம். இந்த வெள்ளைப் படுதல் என்பதால்  உண்டாகும் கோளாறுகள் என்றால் உடல் ஆரோக்கியம் மாற்றம், முகத்தில் பொலிவு குறைவு, பசியின்மை, ஜீரணமின்மை  யோசனைகள்   அதிகமாக இருப்பது, நாள் முழுவதும்  படுத்துக்கொண்டே இருக்கலாம் போல இருப்பது, பொலிவு தேய்ந்து உடல் எடை குறைந்துகொண்டே இருக்கும். வெள்ளைப் படுதல் கோளாறுகள் இருக்கிறது என்பதை உறுதி செய்துக்கொண்ட பின்னர்  வெண்பூசணி சாற்றை 30 மிலி என்று எடுத்து காலை உணவுக்கு முன்பு, இரவு உணவுக்கு முன்பு என்று அருந்தி வர வேண்டும். மூன்று மாதத்தில் முற்றிலுமாக குணமாகிவிடும்.

மருத்துவத்துக்கும் அல்வா!

மாதவிலக்கு காலங்களில் கருப்பை வீக்கம், தும்மினால் உதிரப்போக்கு, எடை தூக்கினாலும், படிக்கட்டுக்கள் ஏறி இறங்கினாலும் உதிரப்போக்கு என்று ஒரு சில பெண்களுக்கு தொந்திரவுகள் கொடுக்கும். மருத்துவர் வயதாகிவிட்டது கருப்பையை  எடுத்துவிடுங்கள் என்று சொல்லுவார். இது தீர்வு அல்ல, இயற்கையான முறையில் கருப்பை வீக்கத்தை குறைக்கக் கூ டிய முக்கியமான மருந்து  வெண்பூசணி சாறு குடிப்பது. அல்லது வெண்பூசணி அல்வா என்று செய்து சாப்பிடலாம்.

புற்று நோய் செல்கள் அழிந்து போகும்…

ஆஸ்துமா சம்பந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எச்சிலுடன்  ரத்தம் வெளியே போகும்… தும்மலுடன்  ரத்தம் வெளியே போகும், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு ரத்தம் வெளியேறும். அப்படிப்பட்டவர்களுக்கு வெண்பூசணி சிறந்த மருந்து.வெண்பூசணி அல்கலைன் சம்பந்தப்பட்ட உணவு.வெண்பூசணியை மருந்தாக சாப்பிட்டால்  புற்று நோய் செல்கள் கூட அழிந்து போகும், சளிப்பிரச்சனை சம்பந்தப்பட்ட எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும்  நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி  உடலில் நிறைய பிரச்சனைகளைத் தீர்க்க கூடிய அருமருந்து வெண்பூசணி. வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு இருமுறை வெண்பூசணியை  உணவாக சாப்பிட்டு வந்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.

Click to comment

Copyright © 2021