Vitiligo

வெண்புள்ளி நோயை முழுமையாக குணமாக்க

தோல் பிரச்சனை…நமது தலையாய பிரச்சனை….!

தோல் பிரச்சனை…நமது தலையாய பிரச்சனை….!

வெண்புள்ளி கஷாயம்!

தோலில் நிறைய பிரச்சனைகள்… தோல்  அரிப்பு, தோல் உதிர்தல், தோல் நிறமாற்றம், எதுவாக இருந்தாலும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மனதில் வருத்தத்தை உண்டாக்கி விடும். இப்[படி தோலில் உண்டாகும் சில வெண்புள்ளிகள் குணமாகும், சில வென்புள்ளிகள் குணமாகாது.  இந்த வெண்புள்ளிகளுக்கு தீர்வு கிடைக்குமா என்று ஏக்கத்தில் இருப்பவர்கள் பலர். அவர்களுக்கான வெண்புள்ளி கஷாயம் செய்வது குறித்து பார்க்கலாம்.  

வெண்புள்ளி கஷாயம் செய்யாத தேவையான பொருட்கள்:

காட்டு சீரகம் அல்லது கருஞ்சீரகம் சூரணம் 5 கிராம்,எள்ளு சூரணம் 5 கிராம், மிளகு சூரணம் 5 கிராம்.  

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மில்லி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வைத்துவிடுங்கள், இதை காலை உணவுக்கு முன்பு ஒருவேளை,இரவு உணவுக்கு முன்பு ஒரு வேளை என்று பருகி வாருங்கள். ,

மன அழுத்தம் கொடுக்கும் வெண்புள்ளிகள்….

தோலில்  நிறமாற்றம்… முகம், உதடு, கைகள், கால்கள் என்று வெளிப்புறமாகத் தெரிகின்ற இடங்களில் இப்படியான வெண்புள்ளிகள் மன அழுத்தத்தை தந்துவிடுகிறது. இவர்கள் திருமணம், திருவிழாக்கள் என்று எதற்கும் போக மாட்டார்கள். இந்த வெண்புள்ளி நோய் தன்மை 6 வகைகளில் உள்ளது. சூரிய ஒளி படத்தை இடங்களான ஆன் குறி, பெண்குறியில் மட்டும் வருவது., அடுத்து கை, கல், கழுத்து பகுதிகளில் வருவது, அடுத்து ரோமம் உலா இடங்கள் அதாவது பெண்களுக்கு புருவத்தில், ஆண்களுக்கு மீசை தட்டி வளரும் இடங்களிலும் வருவது, அடுத்து, உடல் முழுவதும் வெண்புள்ளிகள் வருவது, அடுத்து உள்ளுக்கு எதாவது ஒரு நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் ஒவ்வாமை அல்லது சுற்றுப்புற சூழலினால் ஒவ்வாமையில் வரும் வெண்புள்ளிகள், அடுத்து உடலின் நச்சு பொருட்கள் சேர்வதால் வருவது, அடுத்து உடயலில் உள்ள 17 வகை கனீம பொருட்கள் கூடுதல், அல்லது குறைவதினால் வரும் வெண்புள்ளிகள் என்று இத்தனை வகை இருக்கிறது. கபம் பித்தம் வாதம் தொடர்பான 13 வகையான வெண்புள்ளிகள்  ஒரு வகை வெண்புள்ளி மட்டும் குணப்படுத்த முடியாது.

வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம்…

இன்றைக்கு பெண்களுக்கு வெண்புள்ளிகள் மிகச்சாவாலாக இருக்கிறது. வயதுக்கு வந்த பின்னர்  வெண்புள்ளிகள், கரு அடையும் போது வெண்புள்ளிகள், சில பெண்களுக்கு  மெனோபாஸ் காலங்களில் வெண்புள்ளிகள், கருப்பையை எடுத்த  பிறகு நாளமில்லா சுரப்பிகளினுடைய செயல்பாடுகள்  குறைவாகும்போது வெண்புள்ளிகள், என்று மிகப்பெரிய சவாலாக இந்த வெண்புள்ளிகள் இருக்கிறது. ஆண்களை பொறுத்தவரையில்  இது சரி செய்யக்கூடிய பிரச்சனைதான்.குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைக்கு வெண்புள்ளி கஷாயம்  செய்ய தேவையான பொருட்களை  அம்மியில் வைத்து மைய அரைத்து உடலுக்கு பூசினால் குணமாகி விடும்.பாண்டிச்சேரியில் இது போல உடல் ,முழுவதும் வெண்புள்ளிகள் என்று பிரச்சனையோடு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வருவார்கள்.அவர்களுக்கு இந்த மருந்தை சொல்லி வெளிப்பூச்சாக பூசி வாருங்கள் என்று சொல்லும்போது, படிப்படியாக வெண்புள்ளிகள் இருந்த இடங்ககளில் கரும்புள்ளிகளாக மாறி வந்து பின்னர் உடல் முழுவதும் வெண்புள்ளிகள் மறைந்து நார்மல் தோலாக  மாறுவதை பார்க்க முடியும்.

Click to comment

Copyright © 2021