TAMIL

மருத்துவர் ஆலோசனை பேரில் எட்டிக்காய் எடுக்க… மிகச்சிறந்த வலி நிவாரணி!

ஆயுர்வேதத்தில் வலி நிவாரண மருந்து இல்லை என்று கருத்து எல்லோரிடமும் இருக்கிறது.

ஆயுர்வேதத்தில் வலி நிவாரண மருந்து இல்லை என்று கருத்து எல்லோரிடமும் இருக்கிறது.

முறையாக சுத்தி செய்த எட்டிக்காய் மிகச்சிறந்த வலி நிவாரணியாக இருக்கிறது. உலகத்தில் எட்டிக்காய்க்கு நிகரான வலி நிவாரணி இல்லை என்று சொல்லலாம்.  புற்று நோய்க்கு  மார்பின் சம்பந்தப்பட்ட ஊசி மருந்தை செலுத்துவார்கள். இதுவும் ஒரு போதை பொருள் தொடர்புடையதுதான்.இந்த ஊசியை புற்று நோயாளிக்கு செலுத்தினால், 6 மணி நேரம் வரை மட்டுமே வலி இல்லாமல் இருக்கும். எனவே 6 மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த ஊசி மருந்தை செலுத்துவார்கள்.

அமெரிக்க பல்கலையின் எட்டிக்காய் ஆய்வு!

அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று எட்டிக்காயை ஆராய்ச்சி செய்து, எட்டிக்காயை சுத்தி செய்து அதன்  என்சைம்களை  மார்பின் ஊசியோடு சேர்த்து செலுத்தும்போது 24 மணி நேரத்துக்கு வலியே இல்லாமல் இருக்கிறார்கள் என்று, இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.  

வலிகளை உண்டாக்கும் காரணிகளும் இருக்காது!

முடக்கு வாதம் தொடர்பான பிரச்சனை, கால்களை அசைக்க முடியாத வேதனை. மூட்டுக்களின்  தேய்மான விகிதங்கள் அதிகமாகி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டவர்கள்  இவர்களுக்கான அருமருந்தாக எட்டிக்காய் சுத்தி செய்த மருந்து இருக்கிறது. ஆயுர்வேதத்தில் எட்டிக்காய் மருந்தை வலி நீக்க மட்டும் அல்ல, வலிகளை உண்டாக்கும் காரணிகளை போக்கும் மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒண்ணுக்கு ரெண்டுக்கும் போக உணர்ச்சி இல்லையா?

முதுகுத் தண்டு ஒடிந்து போன சூழலில், ஒன்றுக்கு இரண்டுக்கு போவது கூட தெரியாமல் உணர்ச்சியற்ற நிலையில் பலர் வந்து, இந்த சுத்தி  செய்யப்பட்ட எட்டிக்காய் மருந்து சாப்பிட்டு குணமடைந்து, உணர்ச்சி தெரிகிறது, ஒன்றுக்கு இரண்டுக்கு கண்ட்ரோலில் இருக்கிறது  என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த எட்டிக்காய் சூரணம் மட்டும் தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளவே கூடாது.

Click to comment

Copyright © 2021