TAMIL

புற்று நோயை தீர்க்கும், கட்டுக்குள் வைக்கும் சிவகரந்தை கஷாயம்:

உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய நோய் புற்று நோய்.

உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய நோய் புற்று நோய்.

இதில்  தீரும் நோய் தீராத நோய்  என்று இரண்டு வகை உண்டு. புற்றுநோயை  மருந்துகளை கொண்டு கட்டுக்குள் வைப்பது இந்த  சிவகரந்தை கஷாயம்.இது பற்றி இப்போது பார்க்கலாம்.

சிவகரந்தை கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

சங்கன் குப்பி மற்றும் சங்கன் குப்பி வேர்  சூரணம் தலா 2 கிராம்.  லவங்கம் சூரணம் 2 கிராம்,  சிவகரந்தை சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, 100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை, மதியம், இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

ஆயுளை விருத்தி செய்யும் சிவகரந்தை கஷாயம்!

புற்றுநோயை கட்டுக்குள் வைக்கும், அதோடு சில வகை  புற்று நோயை நீக்கும் அருமருந்து இந்த சிவகரந்தை கஷாயம். உடலில் ஏற்படும் கட்டிகள்;., புற்று நோய் காரணிகளை நீக்கும் அருமருந்து. சித்த மருத்துவத்தில் உபயோகப்படுத்தும் சிவகரந்தை சங்கன் குப்பி நெடுஞ்சாலைகளில் இருக்கும். ஆயுளை விருத்தி செய்யும். உறுப்புக்களின் செயல்பாடு குறைவதை  காப்பாற்றும்.  கணையத்தின் அழற்சி சர்க்கரை நோயின் உருவாக்கும் அழற்சிகளை குறைக்கும்.  இந்த சிவகரந்தை கஷாயம் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது. படிப்படியாக உடலில் இருக்கும் அழற்சி விகிதங்கள் குறைக்கப்பட்டு மாற்றங்கள் உண்டாகும்.

மீண்டும் புற்று நோய் வராமல் தடுக்க…

புற்று நோய் சிகிச்சை என்று வரும்போது அதனுடன் சேர்த்து சிகிச்சையின் பக்க விளைவை  குறைக்க இந்த கஷாயம். நிறைய பேருக்கு பரிந்துரை செய்து இருக்கிறேன். ஏற்கனவே ஒருமுறை புற்று நோய் வந்து மீண்டும் வராமல்  இருக்க என்ன செய்வது என்றால் இந்த சிவகரந்தை கஷாயம்தான் சாப்பிட வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது  புற்று நோய் காரணிகள் மீண்டும் ஏற்படாது.

Click to comment

Copyright © 2021