TAMIL

தலைமுடியை வளர்க்கும் கேசவர்த்தினி…!

கேசவர்த்தினி,தலைமுடி, தலை பொடுக்கு பிரச்னையை நீக்கும்.

கேசவர்த்தினி,தலைமுடி, தலை பொடுக்கு பிரச்னையை நீக்கும்.

இந்த செடி  ஊதா நிறப்பூக்கள் கொண்டு இருக்கும். இதை உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் பயன்படுத்தலாம்.உட்புறமாக பயன்படுத்த சாறு 30 மிலி அளவுக்கு எடுத்து  நேரடியாக பயன்படுத்தலாம். அல்லது அரைத்து எடுத்த விழுது கொட்டைப்பாக்கு அளவு காலை, இரவு உணவுக்கு முன்பு பயன்படுத்தலாம். இந்த விழுதை பேக்காக போட்டும் தலைக்கு குளிக்கலாம்.

தலைமுடி கொட்டுகிறதே… நிறைய செலவு செய்துவிட்டீர்களா?

தலைமுடி பிரச்சனைகளில் முதலாவதாக தலைமுடி கொட்டுதல், தலைமுடி உடைதல், முடி வளராமல் இருப்பது இதற்கெல்லாம் நிறைய செலவு செய்கிறார்கள். அப்படி செலவு செய்தும் பிரச்சனை தீரவில்லை. எண்ணெய், பூச்சுக்கள் மருந்துகள் நிறைய பொருட்கள் உபயோகப்படுத்தினாலும்  திருப்தியற்ற தன்மை. கேசவர்த்தினி  அரைத்து தலைமுழுவதும் பூசிக்குளிக்கும் பழக்கம்  இன்றும் கேரள பெண்களுக்கு இருக்கிறது. இதை நன்றாக அரைத்து கை  அளவு எடுத்து தலையில் பேக் போல போட்டு  குளித்து விடுவார்கள். சாறை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தடவுவார்கள். இந்த இயற்கை பொருள் மகத்துவத்தை மறந்து போவதால் தலைமுடி இல்லாமல் போகிறது. இழந்த தலைமுடி மீண்டும் பெற பொடுகு, புழுவெட்டு இல்லாமல் இருக்க கேசவர்த்தினியை பயன்படுத்தலாம்.  

ஈரல் மேல் கொழுப்பு படிந்து இருக்கிறதா?

ஈரல் பிரச்சனை உடலில் இருக்கும் போது கொழுப்பு அமிலங்கள் மாறுபாடு, அடுத்து  ஈரல் மேல் கொழுப்பு. படிந்து இருக்கிறது என்று சோதனையில் தெரியவரும். மருத்துவரால் மருந்துகள் வாழ்நாள் முழுவதும் எடுக்க அறிவுறுத்படுவார்கள். இந்த மருந்துகளின் பக்க விளைவு என்று பார்த்தல் விரைவில் வயதாகும் தன்மை வந்துவிடும். எனவே, இதை இயற்கை  முறையில் எப்படி குணமாக்க முடியும் என்று பார்த்தால், கேசவர்த்தினி சாறு 30 மிலி அல்லது விழுது கொட்டைப்பாக்கு அளவு எடுத்து காலை, இரவு உணவுக்கு முன்பு என்று உள்ளுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மண்டலங்கள் இப்படி சாப்பிடும்பொப்பது படிப்படியாக முன்னேற்றம் தெரியும். சோதனை செய்து பார்த்தால், ஈரல் மேல் படிந்து இருக்கும் கொழுப்பு கரைந்து போயிருக்கும். பித்தப்பையில் கற்கள் உருவாக்கி இருந்த தாள் கூட கரைந்து  போயிருக்கும்.

விந்து முந்துதல் பிரச்சனை…

விந்து முந்துதல்…இது தொடர்பான பிரச்சனையை குறைக்கும் இயற்கை மருந்து இதை சாறு எடுத்து 30 மிலி அல்லது விழுது கொட்டைப்பாக்கு அளவு 3 மாதம் தொடர்ந்து சாப்பிடும்போது படிப்படியாக முன்னேற்றம் இருக்கும  வடிவான .உடலமைப்பு மாற்றம் இருக்கும். உடல் எடை தேறவில்லை என்கிற பிரச்சனை. 100 இல் 5 பேருக்காவது இருக்கிறது. அவர்கள் உடல் எடை கூட கேசவர்த்தினி சாறு அல்லது விழுது எடுத்து முன்பு சொல்லி இருப்பது போல சாப்பிட வேண்டிய  அளவில் சாப்பிட்டு வர வேண்டும். 3 மாத காலத்தில் உடல் எடை கூடும்.

வெள்ளைப்படுதல்…உடல்  இளைப்பு

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்பட்டு உடல் இளைத்து வரும். முகம் பொலிவின்றி இருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் இந்த கேசவர்த்தினி சாறு அல்லது விழுதை தொடர்ந்து 3 மாத காலத்துக்கு சாப்பிட்டு வர வேண்டும்.வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகி முகத்தில் பொலிவு கூடும்.

Click to comment

Copyright © 2021