துளசியின் இலை, தண்டு,, பூ, விதை அனைத்துமே மருந்துக்கு பயன்படுத்துவார்கள்.
விதை புற்று நோய்க்கு கூட மருந்தாக இருக்கிறது. பச்சையாக சாப்பிடும்போதுதான் மாற்றம் ஏற்படும். விழுது கொட்டைப்பாக்கு அளவு, காலை, இரவு உணவுக்கு முன்பு.சாப்பிடலாம். சாறு காரத்தன்மை இருக்கும் சோ, தேன் கலந்து காலை இரவு உணவுக்கு முன்பு எடுத்துக்கொள்ளலாம்.
மனம் தொடர்பான பிரச்சனை….
மனம் சம்பந்தப்பட்ட , உடல் சம்பந்தப்பட்ட நோய்க்கு தீர்வளிக்கும். துளசி நுரையீரல் தொடர்பான பாதிப்புக்கள், சளி, இருமல் காய்ச்சல் தீர்க்கும் அருமருந்து. துளசி ஜீரகம், மஞ்சள் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போட்டுத் தருவார்கள்.
புற்றுநோய் வாய்ப்பை குறைக்கும் துளசி…
புற்றுநோயை வராமல் தடுக்கும் மூலக்கூறுய்களை கொண்டு இருக்கிறது. புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்கும் இயற்கை காரணிகள் இருக்கிறதா என்கிற ஆய்வு நடைப்பெற்று வருகிறது. இதில் முதல் 10 இடத்தில் இருக்கும் மூலிகைகளில் இந்த துளசி இருக்கிறது. துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தாலே புற்று நோய் வராமல் காக்க முடியும். 21 துளசி 21 வில்வ இலை எந்த வகை புற்று நோயாளிகளும் சாப்பிடும்போது நோய் பரவும் காரணம் குறைகிறது.
சர்க்கரை கண்ட்ரோலில் இல்லையா?
சர்க்கரை நோயாளிகள் உணவு முறை உடற்பயிற்சி,மருந்து என்று கட்டுப்பாடாக இருந்தும் கூட சர்க்கரை கண்ட்ரோலில் இல்லை. என்ன செய்வது என்பார்கள்.இவர்கள் 20 துளசி இலையை காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். 9 வகையான மூலக்கூறுகள் கணையத்தில் வேலை செய்து அழற்சியை நீக்குகிறது. சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். பக்க விளைவுகளில் மாற்றம் ஏற்படும். துளசியின் முக்கியமான குணம் உடலின் அமிலத்தயன்மையை குறைத்து காரத்தன்மையை அதிகரிக்கும். காரத்தன்மை அதிகமானால் உடலில் மாற்றம் ஏற்படும். உறுப்புக்களின் செயல்பாடுகளைத் தூண்டி உறுப்புக்களை காப்பாற்றும்.