சிறுநீரகத்தில் பிரச்சனை.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, வேதனை இருக்கும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருக்கும். சிறுநீர்ப்பாதையில் சுருக்கங்கள் என்று பிரச்சனை இருக்கும். குறிப்பிட்ட ஒரு காலத்தில் சிறுநீரகத்தில் கல் என்ற நிலை போயி, ஒவ்வொரு கோடை காலத்திலும் சிறுநீரக கல் என்று சொல்லும் அளவு சிறுநீரக கல் பிரச்சனை இருக்கும். இதை இயற்கையில் சரி செய்ய முடியுமா? இதோ அதற்கான சிறுகீரை கஷாயம் பற்றி பார்க்கலாம்.
சிறுகீரை கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:
சிறுகீரைவேர் சூரணம் 2 கிராம், சிறு பீளை சூரணம் 2 கிராம், நெருஞ்சில் வேர் சூரணம் 2 கிராம், சீரகம் சூரணம் 2 கிராம்.
செய்முறை
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.
சுகந்த மனம் வீசும் கஷாயம்!
சீரகம் சேர்த்திருப்பதால் இந்த கஷாயத்தில் சுகந்த மணம் அதோடு,சாப்பிட சுவையுடன் இருக்கும்..சிறுகீரை கஷாயம் சிறுநீரக கற்களை நீக்கும் அழகான மருந்து. சிறுநீரக பாதிப்பினால் அதிக வியர்வை, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வேதனை , சிறுநீரக கற்கள், சிறுநீர் பையில் தேங்கி இருக்கும் கற்களை நீக்கும் அருமருந்து. இந்த கஷாயத்தை தொடர்ந்து 100 நாட்கள் சாப்பிட்டால் கற்கள் உடைந்து வெளியேறும். கல்லடைப்பு, ஸ்கேன் செய்து, கற்கள் அளவு, எந்த இடத்தில் கற்கள் இருக்கிறது, சிறுநீர் . பாதை சுருங்கி மடங்கிப் போய் இருக்கிறதா என்று ஆராய்ந்து இந்த கஷாயத்தை கொடுப்போம். கஷாயத்தை தொடர்ந்து 100 நாட்கள் பருகி வந்த பிறகு மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்த்தால் நார்மலாக இருக்கும். கல் அடைப்பை நீக்கும் அருமருந்து.இந்த சிறுகீரை கஷாயம்.,
சிறுநீர் கழிவதில் வேகம் இல்லையா?
சிறுநீரகத்தில் ஏற்படும் தசை அடைப்பு இது 50 வயது அல்லது 55 வயது ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனை. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல் இருக்கும். ஆனால், சிறு நீர் கழிவதில் வேகம் இருக்காது. இந்த அறிகுறிகள் இருந்தால் தசை அடைப்பு என்று சொல்லக்கூடிய புராஸ்டேட் என்லார்ஜ்மென்ட். பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த சிறுகீரை கஷாயத்தை பருகி வந்தால் சிறுநீர் பை சுருங்கி விரியும் தன்மை கிடைக்கும் சிறுநீர் குழாயில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும். சிறுநீர் குழாய்கள் தொய்வுத் தன்மையை இழந்து போனால் பாதை நேராக இல்லாமல் வளையும் அல்லது சுருங்கும். சோ, கடுமையான அழுத்தத்துடன் சிறுநீர் வெளியேறும். இது சிறுநீர் அழற்சி நோயாக மாறிவிடும். கடுமையான வலியும் வேதனையும் இருக்கும். அடைப்பு நீக்கப்படும்போது வேகமாக சிறுநீர் வெளியேறும். இது போன்ற பிரச்சனைகளை குறைக்க அருமருந்து இந்த சிறுகீரை கஷாயம். சுருக்கம், மடிப்பு எரிச்சல் நீங்கும்.
அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுகிறதா?
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு இருக்கும் பெண்களுக்கு சிறுநீர் கசிவு, தும்மினால், இருமினால் மட்டும் அல்லாமல் இரவு தூக்கத்தில் இருந்து கழிப்பறை செல்வதற்கு முன்பே கூட கசிந்துவிடும். சிறுநீர் குழாயின் எலாஸ்டிக் தன்மையை அதிகப்படுத்தும் ஒரு மருந்து இந்த கஷாயம்.அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுவதையும் தடுக்கும்.