இலை பிரண்டையை உடைத்து நுகர்ந்தால் சாராய நெடி வரும்.
எனவேதான் வேர்க்கடலை போன்ற பயிர்களை செய்தால், இதை ஓரத்தில் நட்டு விடுவார்கள். ஆடு மாடு இந்த வாசனைக்கு உள்ளே வராது. இலை பிரண்டை பெயர் காரணம் கிளைகளை மரத்திற்கு கீழே ஊனி வைத்தால் வேகமாக வளர்ந்துவிடும்.
இரண்டு இலை சாப்பிடுங்க போதும்!
யூரினரி டிராக் இன்பெக்ஷன், பிளாடர் வீக்கம்,சிறுநீர் குழல் சுருக்கங்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரக கற்கள் பிரச்சனை, சிறுநீரகம் செயல்படாமல் போகும் பிரச்சனையையும் நீக்கும். சூடு பிடித்தால் இதன் இலையை சாப்பிடுவார்கள் சூடு இல்லாமல் சிறுநீர் கழியும். ரெண்டு இலையை சாப்பிடலாம். கொட்டைப்பாக்கு அளவு விழுது சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை நீக்கும் அருமருந்து. 10 இலையை எடுத்து சாறு எடுத்து பருகினால் பெரிய கற்கள் கூட உடைந்து இயற்கையாக வெளியேறும்
கோடைக்காலம் முழுவதும் சாப்பிடலாம்…
கோடைக்காலம் வந்துவிட்டது என்றால் முக்கியமான பிரச்சனை சிறுநீரக கற்கள் தண்ணீர் குடித்தால் வியர்வையாகி விடுகிறது. சோ, கல் உருவாகி விடுகிறது. வருடத்துக்கு ஒருமுறை இதற்கு அறுவை சிகிச்சை செய்வார்கள். எவ்வாறு இதை குறைக்க முடியும் என்றால் இது மிகச்சிறந்த மருந்து. சாறு அல்லது விழுது கொட்டைப்பாக்கு அளவு எடுத்து கோடைக்காலம் முழுவதும் தினமும் சாப்பிடும் வழக்கம் வைத்துக்கொண்டால் சரியாகும். மற்ற மருத்துவ முறைகளை விட ஆயுர்வேத மருத்துவ முறை நோயை அணுகும் விதம் மாறுபட்டு இருக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாக்கும் காரணிகளை குறைத்து சிறுநீரக பையில் தேங்கி இருக்கும் கற்கள் கூட உடைந்து அடைப்பை ஏற்படுத்தும் பாதிப்பை இலை பிரண்டை சாறு அல்லது விழுது அறுவை சிகிச்சை இல்லாமல் குறைக்கும் சிறந்த மருந்து. ராமநாத புரம், சிவகங்கை போன்ற நகரங்களில் நிறைய தண்ணீர் குடிக்கும்போதும் நீர் சுருக்கு ஏற்பட்டு விடும். அப்போது இந்த இலையை மென்று சாபபிட்டல் நீர்ச்சுருக்கு மறைந்து போகும்.