இருமல், சளி, குத்து இருமல், வறட்டு இருமல், இரவு நேர இருமல், குழந்தைகளுக்கு இருமல், இப்படி நிறைய வகை இருமல்கள், நுரையீரல் மண்டல பிரச்சனை. என்று உடல் அதிர்ச்சிக்கு உள்ளாகிவிடுவோம். வறட்டு இருமல் வந்தால் இதயத்தை கூட பாதிக்கும். இருமலை குணப்படுத்தவும் அதிமதுர கஷாயம். பற்றி இப்போது பார்க்கலாம்.
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் 100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை, இரவு உணவுக்கு முன்பு பருகி வரவும்.
இருமலுடன் கோழையும்….நுரையீரல் மண்டல பிரச்சனை…
நிறைய பேருக்கு இரவு உணவுக்குப் பின் இருமல் வந்து கோழை வரும். இது வயதானவர்களுக்கு அதிகம் இருக்கும். கோழை வற்ற மாட்டேங்குது என்பார்கள். இதை குணப்படுத்தும் அருமருந்து இது. அதோடு, .நுரையீரல் மண்டல நோய்களை நீக்கும் இந்த அதிமதுர கஷாயம். நுரையீரல் மண்டலத்தில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை நீக்கும். உணவில் ஒவ்வாமை ஏற்படும்போது இருமல் அதிகம் இருக்கும். அன்றைய தினத்தை துவக்குவதில் இருந்து படுக்கும் வரை இருமல், தண்ணீர் குடிக்கும்போது உணவு சாபபிடும்போது என்று இருமல் தொந்திரவு. இருக்கும். இதைத் தீர்க்கும் அருமருந்து இந்த அதிமதுர கஷாயம்..
இருமல் தூங்க விடாமல் படுத்தி எடுக்கிறதா?
நிறைய பேருக்கு கோழைக்கட்டு பிரச்சினை இருக்கும். இவர்களுக்கு காலையில் இருந்து இரவு வரை பிசுபிசுப்பு திரவம் வரும். 15 நிமிடத்துக்கு ஒருமுறை நெஞ்சுக்குள் நீர்போல் வந்து அடைப்பை ஏற்படுத்தும். தூங்கவிடாமல் செய்யும். தொண்டைப்பகுதியில் மாறுதலை ஏற்படுத்தும்,. இதற்கு உதவி செய்யும் அருமருந்து இது.குழந்தைகளுக்கு 15 மிலி அளவுக்கு காலை, இரவு கொடுக்கலாம். வறட்டு இருமல் ஏற்படும்போது வயதான பெண்கள் சிறுநீர் கூட கசிந்து விடுகிறது என்று சொல்லுவார்கள். இரவு படுத்தால் இருமல் வந்து விடுகிறது என்று இருபாலாரும் துயரத்தோடு சொல்வார்கள். அதற்கு இது மிகச்சிறந்த மருந்து.100 நாட்கள் சாப்பிட்டால் எவ்வளவு நாட்களாகத் தீராத இருமலும் தீர்ந்து போகும். கோழை பிரச்சனைகளும் மாறிவிடும்.
ஆஸ்த்மா நோயாளிகள்….
ஆஸ்துமா நோயாளிகளுக்கு சவால் என்றால் எப்போது வேண்டுமானாலும் ஆஸ்துமா நோய்த் தாக்கும். நன்றாக இருப்போம், எந்த வாசனை வந்தாவது ஒவ்வாமை ஏற்பட்டு விடும். தண்ணீர் கொட்டும், மூச்சு விட முடியாது., பஃப் எடுத்துக்கொண்டால் மட்டும்தான் சரியாகும். இதை குணப்படுத்த, கட்டுப்படுத்த உதவி செய்யும் இந்த அதிமதுர கஷாயம்.நிறைய குழந்தைகள் சளி இருமல் இல்லாத நாட்களே இல்லை என்று பார்க்கிறோம். பள்ளிகளில் தொற்றை வாங்கி வந்து வீட்டில் இருப்பவர்களுக்கும் இது தொற்றிக்கொள்ளும். இது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குறைக்க இந்த அதிமதுர கஷாயம்.மிகச்சிறந்த மருந்து.