TAMIL

கலைச்செடியாக வளரும் கற்பூர துளசி இத்தனை பயனுள்ளதா?

களைச்செடியாக வளரும்.

களைச்செடியாக  வளரும்.

கற்பூர  துளசி என்று கூட சொல்லுவார்கள் இந்த செடியில் கற்பூர வாசனை வரும். உடலில் ஏற்படும் நிறைய பிரச்சனைகளைத் தீர்க்கும். சோம்பல், தைராய்டு, குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் பிரச்னைக்கு தீர்வாக இருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உடலில் ஏற்படும் கழிவுகளை வெளியேற்றும். இந்த இலையை  அரைத்து எடுக்கும் சாறு காலை,, மதியம் இரவு உணவுக்கு முன்பு சாப்பிடலாம். குழந்தைகளுக்கு என்று வரும்போது 5 மிலி கொடுக்கலாம். இதன் சாறுக்கு நல்ல மணம் இருக்கிறது இந்த மணம்  பிடிக்காதவர்கள் கொட்டைப்பாக்கு அளவு விழுது   சாப்பிடலாம்.

குழாயைத் திறந்து விட்டது போல மூக்கில் நீர் வடிகிறதா?

அலர்ஜிக் சைனஸைட்டீஸ் பிரச்னையை தீர்க்கும் அருமருந்து. சாறு 30 மிலி அளவுக்கு அல்லது விழுது கொட்டைப்பாக்கு அளவு எடுத்தால் குணமாகும். நிறைய பேர் 5 வருஷம் 10 வருஷம் சைன்ஸுக்கு மருந்து சாப்பிட்டேன். ஒன்றும் சரியாகவில்லை என்று வருவார்கள். அவர்களுக்கு  பொதுவாக பரிந்துரைக்கும் இயற்கை மருந்து. இது. ஆஸ்துமா நோய் என்றால் கொடுக்கும் மருந்துகள் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதும். அந்த மருந்துகள் இல்லாமல் இருக்க முடியாது என்று இருப்பதையும் பார்க்கலாம். அதற்கு இந்த துளசி அருமருந்து. இயற்கை முறையில்  ஆஸ்துமா பாதிப்பை இந்த துளசி குறைக்கும். பப் யூஸ் செய்தால் மட்டும்தான் தூங்க முடியுது என்று சொல்வார்கள். அவர்களுக்கு சொல்வது இந்த துளசியின் சாரைத்தான். தொடர்ந்து சாறு சாப்பிட்டு வரும்போது ஆரோக்கியம் மாற்றம் ஏற்படுவதை பார்க்கக் முடியும்.

குழந்தைகளுக்கு டான்சில் பிரச்சனையா?

குரல் வளை பாதிக்கும் பிரச்சனை குழந்தைகளுக்கு டான்சில் பாதிப்பு இவை எல்லாமே சரி செய்யும் சக்தி கற்பூர துளசிக்கு உண்டு. சாறு எடுத்து தேன் கலந்து காலை இரவு கொடுக்கும்போது  பலன் கிடைக்கும்.

09/07/2021, 18:22 – Surya SANKARA TV: https://www.youtube.com/watch?v=y67KeihjEIw

சிறுநீரக கற்களை இயற்கையாக நீக்க இதை செய்யுங்கள்….இலை பிரண்டை!

இலை பிரண்டையை உடைத்து நுகர்ந்தால் சாராய நெடி வரும். எனவேதான் வேர்க்கடலை போன்ற பயிர்களை  செய்தால், இதை ஓரத்தில் நட்டு விடுவார்கள். ஆடு மாடு இந்த வாசனைக்கு உள்ளே வராது. இலை  பிரண்டை பெயர் காரணம் கிளைகளை மரத்திற்கு கீழே  ஊனி வைத்தால் வேகமாக வளர்ந்துவிடும்.

இரண்டு இலை சாப்பிடுங்க போதும்!

யூரினரி டிராக் இன்பெக்ஷன், பிளாடர் வீக்கம்,சிறுநீர் குழல் சுருக்கங்கள், சிறுநீர் கழிக்கும்போது  எரிச்சல், சிறுநீரக  கற்கள் பிரச்சனை,  சிறுநீரகம் செயல்படாமல் போகும் பிரச்சனையையும் நீக்கும். சூடு பிடித்தால்  இதன் இலையை சாப்பிடுவார்கள் சூடு இல்லாமல் சிறுநீர் கழியும். ரெண்டு இலையை சாப்பிடலாம். கொட்டைப்பாக்கு அளவு விழுது சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை நீக்கும் அருமருந்து. 10 இலையை எடுத்து சாறு எடுத்து பருகினால் பெரிய கற்கள் கூட உடைந்து இயற்கையாக வெளியேறும்  

கோடைக்காலம் முழுவதும் சாப்பிடலாம்…

கோடைக்காலம் வந்துவிட்டது என்றால் முக்கியமான பிரச்சனை சிறுநீரக கற்கள் தண்ணீர் குடித்தால் வியர்வையாகி விடுகிறது. சோ, கல் உருவாகி விடுகிறது. வருடத்துக்கு ஒருமுறை இதற்கு அறுவை சிகிச்சை செய்வார்கள். எவ்வாறு இதை குறைக்க முடியும் என்றால் இது மிகச்சிறந்த மருந்து. சாறு அல்லது விழுது கொட்டைப்பாக்கு அளவு எடுத்து கோடைக்காலம் முழுவதும் தினமும் சாப்பிடும் வழக்கம் வைத்துக்கொண்டால் சரியாகும். மற்ற மருத்துவ முறைகளை விட  ஆயுர்வேத மருத்துவ முறை நோயை அணுகும் விதம் மாறுபட்டு இருக்கிறது.  சிறுநீரகத்தில்  கற்கள் உருவாக்கும் காரணிகளை குறைத்து சிறுநீரக பையில் தேங்கி இருக்கும் கற்கள் கூட உடைந்து  அடைப்பை ஏற்படுத்தும் பாதிப்பை இலை பிரண்டை சாறு அல்லது விழுது  அறுவை சிகிச்சை இல்லாமல் குறைக்கும் சிறந்த மருந்து. ராமநாத புரம், சிவகங்கை போன்ற நகரங்களில் நிறைய தண்ணீர் குடிக்கும்போதும்  நீர் சுருக்கு ஏற்பட்டு விடும். அப்போது  இந்த இலையை மென்று சாபபிட்டல் நீர்ச்சுருக்கு மறைந்து போகும்.

Click to comment

Copyright © 2021