TAMIL

ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு தரும் இஞ்சி!

இஞ்சி சாறும் தேனும் கலந்து.

இஞ்சி சாறும் தேனும் கலந்து.

நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது இஞ்சி. இதனைத் தோல் எடுத்து உபயோகப்படுத்த வேண்டும். இஞ்சி விழுதை நேரடியாக மருந்தாக சாப்பிடலாம். இஞ்சி சாறு எடுத்தும் தேன் கலந்து நேரடியாக மருந்தாக சாப்பிடலாம். அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்து தேன் அல்லது பணம் கற்கண்டு சேர்த்து பருகலாம். 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன்  பெரியவர்களுக்கு குறைந்தது 5 டீஸ்பூன் என்று இஞ்சி  சாறு மருந்தாக தேன் கலந்து கொடுக்கலாம்.

உடலை உரமாக்கும் இஞ்சி….நுரையீரலுக்கும் பலம் சேர்க்கும்!

இஞ்சி  மருந்தாக  சாப்பிட்டு வரும்போது உடலை உரமாக்கி பலப்படுத்தக் கூடியது,  சளி பிடித்து, நீர்க்கோர்வை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு துண்டு இஞ்சியில்  சாறு எடுத்து தேன்  கலந்து கொடுப்பார்கள். உடலில்  ஏற்படுகின்ற சளி, நுரையீரல் மண்டலம் பிரச்சனையைக் குறைக்க, வயிற்று பொருமல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குறைக்க இஞ்சி பயன்படுகிறது. பேருந்து பயணம் செய்பவர்களுக்கு வாந்தி குமட்டல் என்று பிரச்சனை இருக்கும். இவர்களுக்கு இஞ்சி மரப்பா  வாங்கி சாப்பிட்டால் வாந்தி வராது.

ஐயோ ஒற்றைத் தலைவலி…

ஒற்றைத் தலைவலி பிரச்சனை காலை நேரங்களில் 4 அல்லது 5 மணிக்கு ஆரம்பிக்கும், சூரியன் வந்த பிறகு தலைவலி உச்சத்துக்கு போகும், குமட்டி குமட்டி வாந்தி எடுத்தால்தான் பித்தம் குறைந்து வாந்தி நிற்கும். பின்பு தூக்கம் வந்துவிடும். சிலருக்கு வாரத்துக்கு ஒருமுறை என்று ஒற்றைத் தலைவலி வரும்.இப்படிப்பட்டவர்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து காலை ஒருவேளை மட்டும் உணவுக்கு முன்பு 50 மிலி என்கிற அளவில் சாப்பிட்டு வர ஒற்றைத் தலைவலி நாளடைவில் குணமாகும்,வாந்தி நிற்கும்., பித்தம் குறையும்.

முடக்கு வாதத்துக்கு பைபை…

சிலருக்கு முடக்கு வாதம் தொடர்புடைய மூட்டு வலி வந்து கை,கால்  மரத்துப்போகும். இவர்கள் படுக்கையை விட்டு எழ முடியாமல் தவிப்பார்கள். வெந்நீர் ஊற்றி சரி செய்ய வேண்டும்..அல்லது யாராவது இவர்களுக்கு கை காலை உருவி விட  வேண்டும்.இதை கட்டுக்குள் வைக்க  இஞ்சி சாறு   30 மில்லி அளவு எடுத்து தேன் அல்லது பணம் கற்கண்டு சேர்த்து 100 நாட்களுக்கு காலை ஒரு வேளை  மட்டும் சாப்பிட்டு வர  முடக்கு வாதம் தொடர்புடைய  பிரச்சனைகள் நீங்கும்.

Click to comment

Copyright © 2021