Skin problems

எல்லா விதமான தோல் நோய்களையயும் தீர்க்கும் அதிசய மூலிகை!

நிலவு போல ஜொலிக்கும் முக அழகுக்கு செவ்வெள்ளி கொடி அல்லது மஞ்சட்டி மூலிகை!

நிலவு போல ஜொலிக்கும் முக அழகுக்கு செவ்வெள்ளி கொடி அல்லது மஞ்சட்டி மூலிகை!

முகம் பொலிவுக்கு, நிறத்துக்கு என்று முகப்பூச்சுக்கள் கடைகளில் விற்கப்படுகிறது.

இதனால் மாற்றம் கிடைக்கிறதோ இல்லையோ, இந்த செவ்வெள்ளி அல்லது மண்சட்டி என்று சொல்லப்படும் மூலிகையில் இதற்கான மருத்துவ குணம் இருக்கிறது. ரத்தத்தை சுத்தி செய்யும் செவ்வெள்ளி தோல் அழுகும் நிலையில் இருந்தாலும் அதை சரி செய்கிறது.

நச்சுக்கள் உடனடியாக வெளியேறும்…

செவ்வெள்ளி சூரணம் 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து 500 மிலியாக வற்றியவுடன் எடுத்து வடிக்கட்டி காலை இரவு உணவுக்கு முன்பு குடித்து வரலாம். அல்லது இந்த சூரணத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நேரடியாக  ரத்தத்தில் சேரும்.ரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் உடனடியாக வெளியேறும். பால்வினை நோய்கள், வெரிகோஸ் வெயின் அல்சர், சர்க்கரை நோயினால் கால்களில் உண்டான புண்கள் உடனடியாக ஆறிவரும்.  

யூரிக் ஆசிட் மூட்டுக்களில் சேரும்போது….

யூரிக் ஆசிட் வெளியேறாமல் உடலில் தங்க ஆரம்பித்து, மூட்டுக்கள் இடையே சேரும்போது கவுட் ஆர்த்ரைடிஸ் உண்டாகிறது. நவீன மருத்துவத்தில் இந்த கவுட் ஆர்த்ரைடிஸூக்கு மாத்திரை சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் இந்த செவ்வெள்ளி கஷாயத்தை வைத்து பருகி வந்தால் கவுட் ஆர்த்ரைடிஸ் நோய் குணமாகும்.   செவ்வெள்ளியில் இருக்கும் ஒருவித மூலக்கூறு ரத்தத்தை இலகுவாக்குகிறது. அதாவது திக்னெஸை குறைக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ரத்த கட்டிகள் ஏற்படாமல் பாதுகாக்கும் முக்கிய மருந்து என்று செவ்வெள்ளி கஷாயத்தை சொல்லலாம். என்னதான் மருத்துவ குணங்கள் நிறைந்து இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை மருந்தாக பயன்படுத்துதல் கூடவே கூடாது.

Click to comment

Copyright © 2021