TAMIL

இரவில் தூங்கவிடாமல் செய்யும் வறட்டு இருமல் தொந்திரவா?தீர்வு தருது வறட்டு இருமல் கஷாயம்!

மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய வறட்டு இருமல்.

மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய வறட்டு இருமல்.

வாய் புண், தொண்டைப்புண், செரிமானம் இல்லாமல் ஏற்படுகிற வாந்தி,. குத்தி குத்தி இருமல் வந்து இரவில் தூங்கவிடாமல் தொந்திரவு செய்கிறது,வருடக்கணக்கில் வாந்தி, வாந்தி எடுக்கும்போது  சிறுநீர் கசிவு  கூட  ஏற்படுகின்றது என்று பலரும் கூறுவார்கள். அவர்களுக்கான அருமருந்து இந்த வறட்டு இருமல் கஷாயம்..

வறட்டு இருமல் கஷாயம் செய்யத்  தேவையான பொருட்கள்:

ஏலக்காய் சூரணம் 3 கிராம்,   நெல்லிக்காய், சூரணம் 3 கிராம்,   வால் மிளகு  சூரணம் 3 கிராம், ,அதிமதுரம், சூரணம் 3 கிராம்,  வெண்சந்தனம், சூரணம் 3 கிராம், கருப்பட்டி  3 கிராம்.

செய்முறை:

மேற்கண்டவற்றை 300 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மிலியாக வற்றியவுடன், வடிக்கட்டி காலை ஒருவேளை உணவுக்கு முன்பு மதியம் ஒருவேளை உணவுக்கு முன்பு,இரவு ஒரு வேளை உணவுக்கு முன்பு என்று அருந்தி வாருங்கள்.

15 நாட்களில் இயற்கை முறையில் சரியாகி விடும்….

நல்ல மணம், சுவை கொண்ட இந்த வறட்டு இருமல் கஷாயம், நாள்பட்ட வறட்டு  இருமல்,தொண்டை குழிப்புண் எல்லாவற்றையும்   15 நாட்களில் அல்லது ஒரு வாரத்தில் சரி செய்துவிடும்..

குழந்தையுடன் பெற்றோர்களும் தூங்காமல் இருப்பார்கள்…

குழந்தைகள் இந்த வறட்டு இருமல் தொந்திரவினால், காலை மற்றும் இரவு படுக்கப்போகும் முன் மிகவும் அவதிப்படுவார்கள், இரவு  தூங்கவிடாது இந்த வறட்டு இருமல், இருமி இருமி வாந்தி வந்த பிறகுதான்  கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி தூங்குவார்கள். தினமும் இப்படித்தான் தொந்திரவு கொடுக்கும்,. பெற்றோர்களும் இதனால் தூங்க முடியாமல் மனக்கவலைப்பட்டு என்னதான் தீர்வு என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த வறட்டு இருமல் கஷாயத்தை கொடுதால்  நல்ல தீர்வு கிடைக்கும்.  5 வயது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மூன்று வேளை  உணவுக்கு முன் 15 மிலி அளவு வறட்டு இருமல் கஷாயம் கொடுக்கலாம். 20 வயதுக்கு மேல் என்றால் 30 மிலி அளவும், பெரியவற்கள் 50 மிலி அளவும் எடுத்துக்கொள்ளலாம்.

தொண்டையில் கிச்சுகிச்சுவா ஒரு டோஸ்  எடுங்க!

தொண்டையில் கிச்சுகிச்சுவா? உடனே வறட்டு இருமல் கஷாயம் ஒரு டோஸ் எடுத்ததால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இன்றைக்கு ஆஸ்துமா நோய் பெரும் சவாலாக இருக்கிறது.குளிர்கால ஆஸ்துமா, கோடைக்கால ஆஸ்துமா, ஒவ்வாமை  ஆஸ்துமா, உடல் பலஹீனத்தால் ஆஸ்துமா என்று பலவகை ஆஸ்துமாக்கள்  இன்றைக்கு பெரும் சவாலாக இருக்கிறது.என்ன  மருந்துகளை சாப்பிட்டும் பலனில்லை, என்ன வகையான பூச்சுக்கள் தடவியும் பலனில்லை என்று சொல்வார்கள். இப்படியான பிரச்சனைக்கு வறட்டு இருமல் கஷாயம் நல்ல தீர்வாக இருக்கும்., மலச்சிக்கல். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சனைகளுக்கும் கூட நல்ல தீர்வு இந்த வறட்டு இருமல் கஷாயம்.

காலையிலேயே வயிறு உப்பிசமா?

காலை  எழுந்துக்கொள்ளும்போதே வயிறு உப்பிசம்… பருப்பு, மாமிசம் இப்படி எதாவது சாப்பிட்டால் வயிறு உப்பிசம். இது சம்பந்தப்பட்ட பிரச்னைகளை எவ்வாறு மாற்ற முடியும் என்று பார்த்தாலும் வறட்டு  இருமல் கஷாயம்தான் நல்ல தீர்வாக இருக்கும். ஆஸ்துமா பிரச்சனையால் நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையில் மாற்றம் ஏற்படுவது, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வயிற்றையும், மார்பு பகுதியையும் பிரிக்க கூடிய தசைகளின் அழற்சி இப்படி எல்லவிதத்துக்கும் தீர்வாக இருக்கிறது வறட்டு இருமல் கஷாயம். 

Click to comment

Copyright © 2021