Connect with us

TAMIL

TAMIL

100 நாட்கள் ஜாதிக்காய் சாப்பிட்டு வந்தால்… இல்லறம் படு ஜோராக இருக்கும்!

அருமையான உடல்தேற்றியாகத் திகழும் ஜாதிக்காய்!

அருமையான உடல்தேற்றியாகத் திகழும் ஜாதிக்காய்!

ஜாதிக்காய் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகைதான். குழந்தைகளுக்கான  உரை மருந்துகளில் ஜாதிக்காய் முக்கிய இடத்தில் உள்ளது. இனிப்பு பண்டங்கள், அசைவ உணவுகளில் ஜாதிக்காய்  இடம்பெற்று இருக்கும். நிறைய பேர் ஜாதிக்காய் வெறும் வாசனை பொருள் மட்டும்தான்… மருத்துவ உபயோகம் இல்லை என்று நினைத்துள்ளனர். அப்படியில்லை, ஜாதிக்காய்  உடலை  வளமாக, உரமாக மாற்றும் உடல்தேற்றி.  தசைகளை பலமாக்கி ஆரோக்கியமாக வைத்து இருக்கும்.

இளநரையைப்  போக்கி தலைமுடியை வளரச்செய்யும் ஜாதிக்காய்….

தலை முடியை  வளர வைக்கும் அருமருந்து இந்த ஜாதிக்காய். இளநரை பிரச்சனைகள், முடி மெல்லியதாக இருக்கிறது, உடைந்து போகிறது, தலைமுடி அடர்த்தியாக இல்லை போன்ற  புரச்சனைகளை தீர்க்கும். ஜாதிக்காயை பொடியாக்கி பால் சேர்த்து ஒரு பேக் போல செய்ய வேண்டும். இதைத் தலையில் போட்டு அரைமணி கழித்து குளித்துவிட வேண்டும்.   இதனால் முடி கொட்டும் பிரச்சனை, பொடுகு பிரச்சனைகள் சரியாகும்.  முடி உடைதல் குறைந்து, தலைமுடி  ஆரோக்கியமாக வளரும். முடி கொட்டுகிறது டாக்டர், தேங்காய் எண்ணெய் தடவியும் முடி கொட்டுகிறது என்று என்னிடம் வருவார்கள். அவர்களுக்கு ஜாதிக்காய் சேர்த்து காய்ச்சி வைத்து இருக்கும் எண்ணெயைத் தடவ சொல்லி  கொடுப்பேன். முடிகொட்டுவது நின்று, முடி நன்றாக வளர்கிறது டாக்டர் என்று சொல்லி   இருக்கிறார்கள்.

ஜாதிக்காய் பொடி சாப்பிடுங்க…காலையில் மோஷன் கழிங்க!

நிறைய பேருக்கு காலையில் எழுந்ததும் மோஷன் போகும் எண்ணம் வராது. காலை உணவுக்குப் பிறகு, அல்லது மத்திய நேரத்தில் என்று இஷ்டத்துக்கு மோஷன் கழிக்கும் எண்ணம் வரும்.  இப்படிப்பட்டவர்களுக்கு இதை சரி செய்யும் ஜாதிக்காய். காலையில் ஒரு டேபிள்ஸ்பூன் வெறும் வயிற்றில் தண்ணீர் கலந்து சாப்பிட்டு விடுங்கள். சிறிது நேரத்தில் ஃப்ரீயா  மோஷன் போகும். உடல் கொழுப்பு கரையும்,ஆரோக்கியம் மேம்படும்.

இல்லறத்தில் நாட்டம் இல்லையா?

நிறைய  ஆண்களுக்கு பெண்கள் மேல் இனக்கவர்ச்சி இருக்காது. அதே மாதிரி  பெண்களுக்கும் இல்லறத்தில் நாட்டம் இருக்காது. இந்த மாதிரி  பிரச்சனைகளை  உலகியல் ரீதியாக பெரிய ஆய்வு. எடுத்தபோது, 35 லிருந்து  45 வயதுவரை உள்ள ஆண்களில் 64 சதவிகிதம் பேருக்கு இதுபோல இல்லறத்தில் நாட்டம் இல்லை என்றும்,  30 லிருந்து  40 வயது வரையான பெண்களுக்கு 81 சதவிகிதம் பேருக்கு இல்லறத்தில் நாட்டம் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. இப்படி இல்லறத்தில் நாட்டம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும்  இரவு படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு டீஸ்பூன் அளவு ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடிக்க வேண்டும். இது போல் 100 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த பின்னர் அவர்கள் இல்லறத்தில் ஈடுபடும்போது நல்ல மாற்றம்  தெரியும். இல்லறத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஹார்மோன் அளவில் நல்ல  மாறுதல் இருக்கும்.

ஐயோ மன அழுத்தம்…அவதி!

மன அழுத்தம் காரணமாக  படிக்க பிடிக்கலை என்பார்கள், ஆபீஸ் போக பிடிக்கலை என்பார்கள். இதற்கு ஒரு மருத்துவரை பார்த்து மாத்திரைகள் கூட வாங்கி சாப்பிட்டு வருவார்கள். இதனால் பக்கவிளைவுகள் என்று அவதிப்படுவார்கள். மன அழுத்தத்துக்கு மிக முக்கியமான மருந்தாக ஜாதிக்காய் இருக்கிறது. ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். வாழ்க்கையில் மன அழுத்தம் என்று வராமல் தடுத்தாட்கொள்வதில் ஜாதிக்காய் மிகச்சிறந்த மருந்து.

பூப்பெய்திய பெண்களுக்கு….

ஜாதிக்காய் பெண்களின் இனப்பெருக்க மண்டல விஷயங்களை தூண்டிவிடும். கருக்குழல் அடைப்பு, கருப்பை நீர்க்கட்டிகள் இதை தீர்க்க, என்ன  மருந்துகள் எடுத்துக்கொண்டாலும், ஒரு  இயற்கை காரணியாக செயல்படுவது ஜாதிக்காய்தான்.  பெண்கள் பூப்பெய்திய உடன், அவர்களுக்கு தினமும் இரவு படுக்கும்போது அரை ஜாதிக்காயை பொடி செய்து பாலில் போட்டு சுண்டைக் காய்ச்சி தேன் கலந்து கொடுப்பார்கள். இன்றைக்கும் பழங்குடி கிராமத்தவர்கள் இந்த வழக்கத்தைத் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  பூப்பெய்திய பெண்   ஆரோக்கியம் அடைய வேண்டியும், அவர்கள் கருப்பைக்கு எடையைத் தாங்கும் சத்துக்கள் கிடைக்கவும் ஜாதிக்காயை கொடுத்து வருகிறார்கள்.  

கால் வீங்குது…யூரின் போகலையே …

ஜாதிக்காய் ஒரு  சிறுநீர் பெருக்கி. சிறுநீரக பாதிப்பு என்று மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், கால் வீங்க ஆரம்பித்துவிடும். அவர்கள் ஜாதிக்காயை பொடி செய்து அரைத்தேக்கரண்டி  பாலில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், கால் வீங்காது, சிறுநீர் நன்றாக கழியும்.

100 நாட்கள் ஜாதிக்காய் சாப்பிடுங்க…இல்லறம் படு ஜோர்!

சில ஆண்களுக்கு என்ன பிரச்சனை என்றால்,  உடலுறவு ஆரம்பிக்கும் முன்பே விந்து வெளியாகிவிடும். இனப்பெருக்க மண்டல மாத்திரைகள் உலக அளவில் அதிகமாக விற்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரச்சனையைத் தீர்த்து நிரந்தர குணமாக்கும் இயற்கை காரணி ஜாதிக்காய். ஜாதிக்காய் சூரணம் ஒரு டேபிள் ஸ்பூன் காலை உணவுக்கு முன்பு,இரவு  உணவுக்கு பின்பு என்று 100 நாள் சாப்பிட்டு வரவும். பிறகு இல்லறத்தில் நேரம் நீடிக்கும். பெண்களுக்கு  வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும். சிறுநீர் கழிக்கும்போது வெள்ளை  போகும், பிறப்புறுப்பில் அரிப்பு இருக்கும். இந்த பிரச்சனைகளுக்கும் ஜாதிக்காய் அருமருந்து.

Newsletter Signup

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Health Remedy For Gout (Arthritis)

Joint & Spinal Pain

Change Your Lifestyle to Beat Diabetes

Diabetes

காலையில் எழுத உடனே தும்மல் வந்து கொண்டே இருக்கிறதா ? இதோ அதற்கு வீட்டிலிருந்தே தீர்வு

TAMIL

The Ayurvedic remedy for Gastric Problems

Gastric Problems

Newsletter Signup

Copyright © 2021

Connect
Newsletter Signup

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp