கோடை காலம் வந்துவிட்டால், பல உடல் உபாதைகளும் கூடவே வந்துவிடும். மிக முக்கியமாக ஒற்றைத் தலைவலி, கண்களில் எரிச்சல், பசியின்மை, ஜீரணமின்மை என்று படுத்தி எடுக்கும்.
குளிர்சாதன அறைக்குள் இருந்தாலும் உடல் சூடு பொறுக்க முடியாது. ஒற்றைத் தலைவலி கோடை கால பிரச்சனை. கண்கள் பாதிப்புக்கள் பசியின்மை, ஜீரணமின்மை, ஈரல் பிரச்சனைகளைத் தீர்க்கும் அதிமதுர கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை, இரவு உணவுக்கு முன்பு பருகி வரவும்.
வியர்வை ஆறாக பெருகுகிறதே….!
தலைவலி, காய்ச்சல், விஷ காய்ச்சல் வியர்வை பெருக்குதல், கடுமையான குளிர், மூட்டு வலி என்று அவதிப்படுவார்கள். இவர்கள் அதிமதுர கஷாயம் சாப்பிட்டால் குணம் கிடைக்கும். நல்ல ஆரோக்கியமா இருப்போம்…. தூங்கி எழுந்தவுடன் தலைச்சுற்ற ஆரம்பிக்கும்.இது ரொம்ப அதிகமாகும்போது வாந்தி, மயக்கம் என்று இருக்கும்.இதுவே குறிப்பிட்ட அளவுக்கு மேல் போனால் நினைவு கூட தப்பி விடும். உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பிரச்னையை தீர்த்துவிடும் இந்த அதிமதுர கஷாயம்.
கண் மந்தமாக தெரிகிறதா?
கண்பார்வை கோளாறுகள் மந்தமாக தெரியும் பார்வை,கண் சோர்வு கண் வறட்சி தன்மை, எரிச்சல் போன்ற பிரச்சனைகளால் பார்வை குறைந்துக்கொண்டே வரும். மருத்துவர் பரிசோதனை செய்து நார்மல் ரிப்போர்ட்தான் ….கண் சோர்வு மட்டும்தான் இருக்கு, ஒய்வு எடுங்க என்று சொல்வார்கள்., ஆனால், இந்த குறைபாடுகளை அதிமதுர கஷாயம் நீக்கும். அதிமதுர கஷாயம். சர்க்கரை நோயினால் கண்களில் ஏற்படும் பாதிப்பு, அழுத்தம், புரையினால பாதிப்பு பலஹீனத்தால் ஏற்படும் கண் பாதிப்பு. இந்த பிரச்சனைகளை வேகமாகத் தீர்க்கும்.
ஈரல் பிரச்சனைகள்….
ஈரல் பிரச்சனைகள்…அதாவது ஈரலில் கொழுப்பு படிந்து இருக்கு கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். மருந்து எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் ஈரல் செயல்பாடு குறைதல் ஏற்பட்டு பசியின்மை, ஜீரணமின்மை… வயிற்றுக்குள் போகும் எந்த பொருளும் செரிக்காத தன்மை என்று பிரச்சனை வரும். இதனைக் குறைக்க இந்த அதிமதுர கஷாயம் மிகச்சிறந்த மருந்து.காலை மாலை மாத்திரை சாப்பிடும் ரத்த அழுத்தம் குறையவே இல்லை என்பவர்கள் இந்த கஷாயம் சாப்பிடுங்கள்.